இந்துக்கள், சீக்கியர்கள் மற்றும் பௌத்தர்கள் மட்டுமே பட்டியலிடப் பட்ட சாதியினர் (SC) அந்தஸ்தைக் கோர முடியும் என்று இந்திய உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
இந்தத் தீர்ப்பு 1950-ஆம் ஆண்டின் அரசியலமைப்பு (பட்டியலிடபட்ட சாதியினர்) உத்தரவின் 3-வது பிரிவின் அடிப்படையில் அமைந்துள்ளது.
வேறு எந்த மதத்திற்கும் மாறுவது, பட்டியலிடப் பட்ட சாதியினர் அந்தஸ்தை உடனடியாக இழக்க வழி வகுக்கும் என்று அது கூறுகிறது.
இந்த விதியின் கீழ் சீக்கிய மதம் 1956ஆம் ஆண்டிலும், பௌத்த மதம் 1990 ஆம் ஆண்டிலும் சேர்க்கப்பட்டன.
மற்றொரு மதத்திற்கு மாறிய பிறகு, ஒரு நபர் பட்டியலிடபட்ட சாதியினர் மற்றும் பழங்குடியினர் (வன்கொடுமை தடுப்பு) சட்டம், 1989-இன் கீழ் பலன்களைக் கோர முடியாது.
மீண்டும் மதம் மாறுவதற்கு, அசல் சாதி குறித்த ஆதாரம், உண்மையான மதத் திரும்புதல் மற்றும் சமூகத்தின் அங்கீகாரம் ஆகியவை அவசியமாகும்.