TNPSC Thervupettagam

TAPS குறித்த அரசாணை 2026

January 13 , 2026 13 days 156 0
  • தமிழ்நாடு அரசு, மாநில அரசு ஊழியர்களுக்காக தமிழ்நாடு அரசின் உறுதிப்படுத்தப் பட்ட ஓய்வூதியத் திட்டத்தை (TAPS) 2026 ஆம் ஆண்டு ஜனவரி 1 ஆம் தேதி முதல் செயல்படுத்தியுள்ளது.
  • இந்தத் திட்டத்தைச் செயல்படுத்த, நிதித் துறை 2026 ஆம் ஆண்டு ஜனவரி 9 ஆம் தேதி அன்று ஓர் அரசாணையை (G.O.) வெளியிட்டது.
  • 2026 ஆம் ஆண்டு ஜனவரி 1 ஆம் தேதி முதல் பணியில் சேரும் அனைத்து அரசு ஊழியர்களும் கட்டாயமாக TAPS திட்டத்தின் கீழ் உள்ளடங்குவர்.
  • பங்களிப்பு ஓய்வூதியத் திட்டத்தின் (CPS) கீழ் உள்ள ஊழியர்களில், 2026 ஆம் ஆண்டு ஜனவரி 1 ஆம் தேதி அல்லது அதற்குப் பிறகு ஓய்வு பெறுபவர்கள் TAPS திட்டத்தின் கீழ் உள்ளடங்குவர்.
  • 2026 ஆம் ஆண்டு ஜனவரி 1 ஆம் தேதிக்கு முன்பு CPS திட்டத்தின் கீழ் பணியில் இருந்த ஊழியர்கள், ஓய்வு பெறும் நேரத்தில் TAPS அல்லது CPS திட்டப் பலன்களில் ஏதேனும் ஒன்றைத் தேர்வு செய்யலாம்.
  • TAPS திட்டத்தின் கீழ், ஊழியர்கள் கடைசியாகப் பெற்ற அடிப்படை ஊதியம் மற்றும் அகவிலைப்படியில் (DA) 50% தொகைக்குச் சமமான உறுதிப்படுத்தப்பட்ட ஓய்வூதியத்தைப் பெறுவார்கள் என்ற நிலையில் இதில் 10% பங்களிப்பு ஊழியரால் வழங்கப்படும் என்பதோடு மீதமுள்ள தொகை மாநில அரசால் செலுத்தப்படும்.

 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்