TNPSC Thervupettagam

TNPSC துளிகள்

November 19 , 2025 8 days 63 0
  • ஹவாய் நிறுவனத்துடன் இணைந்து அதன் அனைத்து விமான நிலையங்களிலும் வைஃபை-7 (அருகலை) தொழில்நுட்பத்தைச் செயல்படுத்துவதில் ஓமன் விமான நிலையங்கள் உலகில் முதல் இடத்தைப் பிடித்துள்ளன.
  • 2B-மும்பை மெட்ரோ வழித்தடத்திற்கான மண்டலே பணிமனை ஆசியாவின் மிகப் பெரிய மெட்ரோ பணி மனையாக திறக்கப்பட்டுள்ளது.
  • இந்திய இராணுவமானது, இந்தியா-வங்காளதேச எல்லைக்கு அருகில் அசாமின் துப்ரி மாவட்டத்தில் உள்ள லச்சித் போர்புகன் இராணுவ நிலையத்தில் மூன்று புதிய அரண் படையையும், பீகாரில் உள்ள கிஷன்கஞ்ச் மற்றும் மேற்கு வங்காளத்தில் சோப்ரா ஆகிய இடங்களில் ஆதரவுத் தளங்களையும் நிறுவியுள்ளது.
    • இதனால், தனது எட்டு வடகிழக்கு மாநிலங்களுக்கான குறுகிய நில இணைப்பான சிலிகுரி வழித் தடம் அல்லது 'கோழிக் கழுத்து வழித் தடம்' அருகே மூன்று புதிய ஆதரவுத் தளங்களுடன் இந்தியா தனது கிழக்குப் பாதுகாப்பை பலப்படுத்துகிறது.
  • பெங்களூருவைச் சேர்ந்த நெலே அறக்கட்டளையானது, பின்தங்கிய மற்றும் ஆதரவற்ற குழந்தைகளுக்கு ஆதரவளிக்கும் அதன் விரிவான பணிகளை அங்கீகரிப்பதற்காக 2025 ஆம் ஆண்டு மூலத்வா உலக விருதுக்கு தேர்ந்தெடுக்கப் பட்டுள்ளது.
  • மகாராஷ்டிர மாநில முதல்வர் புதிய வேளாண் துறை முத்திரையையும், "நிலையான வேளாண்மை, வளமான விவசாயி" என்று பொருள்படும் "சஷ்வத் ஷெட்டி, சம்ருத்த ஷேத்காரி" என்ற முழக்கத்தினையும் வெளியிட்டார்.
  • உலக பயன்பாட்டு தினம் ஆனது நவம்பர் மாதத்தின் இரண்டாவது வியாழக்கிழமை அன்று அனுசரிக்கப்படுகிறது என்பதோடு, மேலும் 2025 ஆம் ஆண்டில் பயன்பாட்டுத் திறன், பயன்பாட்டுப் பொறியியல் மற்றும் உலகளாவிய பயன்பாட்டை மேம்படுத்தச் செய்வதற்காக நவம்பர் 13 ஆம் தேதியன்று இத்தினம் அனுசரிக்கப்பட்டது.
    • 2025 ஆம் ஆண்டிற்கான இத்தினத்தின் கருத்துரு, “Emerging Technologies and the Human Experience” என்பதாகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்