போதைப்பொருள் பழக்கம், மருந்துகளின் தவறான பயன்பாடு மற்றும் நுண்ணுயிர் எதிர்ப்புத்திறனைக் கட்டுப்படுத்தும் நோக்கில், 1945-ஆம் ஆண்டின் மருந்துகள் விதிகளின் கடுமையான அட்டவணை H1 பிரிவின் கீழ் பிரெகாபாலினை (Pregabalin) மத்திய சுகாதார மற்றும் குடும்ப நல அமைச்சகம் கொண்டு வந்துள்ளது.
பிரெகாபாலின் நரம்பியல் கோளாறுகளுக்குப் பயன்படுத்தப்படுகிறது ஆனால் இதனைத் தவறாகப் பயன்படுத்தினால் போதைப் பழக்கம் மற்றும் தூக்கக் கலக்கத்தை ஏற்படுத்துவதோடு ஓபியாய்டுகள் அல்லது மதுவுடன் சேர்த்து உட்கொள்ளும் போது கடுமையான சுவாசத் தடையை ஏற்படுத்தலாம்.
ராஞ்சியில் நடைபெற்ற கூட்டமைப்பு கோப்பை தடகளப் போட்டியில் ஆடவருக்கான 100 மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் 10.09 வினாடிகளில் இலக்கை எட்டிய இந்திய ஓட்டப் பந்தய வீரர் குரிந்தர்வீர் சிங், அதிவேக இந்தியர் என்ற பெருமையைப் பெற்றார். இதன் மூலம் 10.0-வினாடி வரம்புக்குள் நுழைந்த முதல் இந்தியர் என்ற சாதனையையும் படைத்தார்.
இந்தோ-திபெத்திய எல்லைக் காவல் படை (ITBP) தனது முதல் அனைத்து-பெண்கள் எவரெஸ்ட் சிகரப் பயணத்தை வெற்றிகரமாக முடித்துள்ளது, இதில் 11 பெண் மலையேறுபவர்களும் தெற்கு கணவாய் வழித்தடத்தின் மூலம் 8,848 மீட்டர் உயரமுள்ள சிகரத்தை அடைந்தனர்.
ஒடிசாவில் உள்ள சந்திப்பூரில் ஒருங்கிணைந்தச் சோதனை தளத்திலிருந்து குறுகிய தூரம் சென்று தாக்கும் அக்னி-1 உந்துவிசை எறிகணையை இந்தியா வெற்றிகரமாக சோதனை செய்தது.
உலகெங்கிலும் கலாச்சார பன்முகத்தன்மை, பண்பாட்டுப் பரிமாற்றம், அமைதி மற்றும் நிலையான வளர்ச்சியை மேம்படுத்துவதற்காக ஒவ்வொரு ஆண்டும் மே 21 அன்று 'உரையாடல் மற்றும் மேம்பாட்டிற்கான உலக கலாச்சாரப் பன்முகத்தன்மை தினம்' கடைபிடிக்கப்படுகிறது.
பல்லுயிர்ப் பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வை பரப்புவதற்காக ஒவ்வொரு ஆண்டும் மே 22 அன்று 'சர்வதேச பல்லுயிர் தினம்' கடைபிடிக்கப்படுகிறது.
2026-ஆம் ஆண்டிற்கான கருத்துரு "Acting locally for global impact" என்பதாகும்.
காணாமல் போன மற்றும் கடத்தப்பட்ட குழந்தைகள் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காக ஒவ்வொரு ஆண்டும் மே 25 அன்று 'சர்வதேச காணாமல் போன குழந்தைகள் தினம்' கடைபிடிக்கப் படுகிறது.