சமூக ஊடகங்களைப் பயன்படுத்துவதற்கான குறைந்தபட்ச வயதை 15 ஆக ஐக்கிய அரபு அமீரகம் நிர்ணயித்துள்ளது; இதன்மூலம் இத்தகைய விதியை அறிமுகப் படுத்திய முதல் அரபு நாடு என்ற பெருமையை அது பெற்றுள்ளது.
15 வயதுக்குட்பட்ட குழந்தைகள் தனிப்பட்ட சமூக ஊடகக் கணக்குகளை உருவாக்கவோ, பயன்படுத்தவோ அல்லது இயக்கவோ முடியாது; மேலும் அவர்களால் பதிவிடவோ, கருத்துத் தெரிவிக்கவோ, உள்ளடக்கத்தைப் பகிரவோ அல்லது பொதுக் குழுக்களில் இணையவோ முடியாது.
திரிபுராவின் பழங்குடியின சமூகங்களின் நரம்பு இசைக்கருவியான 'பாரம்பரிய திரிபுரா சரிந்தா'விற்கு புவிசார் குறியீடு வழங்கப்பட்டுள்ளது; இது அதன் தனித்துவமான கைவினைத்திறன் மற்றும் கலாச்சார முக்கியத்துவத்திற்காக அறியப் படுகிறது.
இந்த அங்கீகாரத்தின் மூலம், திரிபுரா குயின் அன்னாசிப்பழம், ரிசா, பச்ரா (ரிக்னாய்) மற்றும் திரிபுரா சரிந்தா ஆகிய நான்கு புவிசார் குறியீடு பெற்ற தயாரிப்புகளைத் திரிபுரா மாநிலம் தற்போது கொண்டுள்ளது.
ஸ்லோவாக்கியா நாட்டின் உயரிய அரசு விருதான ‘ஆர்டர் ஆஃப் தி ஒயிட் டபுள் கிராஸ், முதல் வகுப்பு’ எனும் விருது பிரதமர் நரேந்திர மோடிக்கு வழங்கப்பட்டுள்ளது.
முதலைகள் மற்றும் பிற முதலை இனங்களின் பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காக ஒவ்வொரு ஆண்டும் ஜூன் 17 அன்று உலக முதலைகள் தினம் அனுசரிக்கப் படுகிறது.
2026-ஆம் ஆண்டிற்கான கருத்துரு “Legacy in Every Scale” என்பதாகும்.