திரிபுராவின் ஜம்புய் மலைகளில் ‘அமோலோப்ஸ் அம்மாச்சி’ என்ற புதிய தவளை இனம் கண்டுபிடிக்கப்பட்டு, ‘இந்தியாவின் தவளை மனிதர்’ என்று அழைக்கப்படும் டெல்லி பல்கலைக்கழகத்தின் எஸ். டி. பிஜு தலைமையிலான குழுவால் பத்மினி வர்க்கி (அம்மாச்சி) நினைவாக பெயரிடப்பட்டுள்ளது.
அமோலோப்ஸ் அம்மாச்சி என்பது அமோலோப்ஸ் என்ற அடுக்குத் தவளைப் பேரினத்தைச் சேர்ந்ததாகும்.
இந்திய தொழில்நுட்பக் கழகம் மெட்ராஷின் ஆதரவு பெற்ற போதன் AI நிறுவனம், AI4Bharat அமைப்புடன் இணைந்து இந்திய மொழிகளுக்கான நான்கு open-weight செயற்கை நுண்ணறிவு மாதிரிகளை அறிமுகப்படுத்தியுள்ளது.
இந்த மாதிரிகள் குரல் அங்கீகாரம், குரல் உருவாக்கம், இயந்திர மொழிபெயர்ப்பு மற்றும் ஒளியியல் எழுத்து அடையாளம் காணல் (OCR) ஆகியவற்றை உள்ளடக்கியவை ஆகும்.
மகாராஷ்டிராவின் கோலாப்பூர் மாவட்டத்தில் உள்ள புசவாடே கிராமத்தில் 'கெஜீனியோஃபிஸ் சந்த்காடி' என்ற புதிய கால்களற்ற இருவாழ்வி (சீசீலியன்) கண்டு பிடிக்கப் பட்டது; இது கெஜீனியோஃபிஸ் பேரினத்தைச் சேர்ந்தது.
இப்பிராந்தியத்தில் பேசப்படும் மராத்தியின் சந்த்காடி பேச்சுவழக்கின் பெயரால் இதற்குப் பெயரிடப்பட்டது.
2026 ஆம் ஆண்டு புதுடெல்லியில் நடைபெற்ற 6வது சர்வதேச பருவநிலை உச்சி மாநாட்டில் (ICS-2026) இந்தியாவின் முதல் செயற்கை நுண்ணறிவு (AI) அடிப்படையிலான பாதுகாப்பு தளமான 'அக்னி கவாச்' அறிமுகப்படுத்தப்பட்டது.
இத்தளம் தொழில்துறை பாதுகாப்பு நடைமுறைகளுக்கு ஆதரவளிக்கவும், தொழில்துறை பாதுகாப்பை வலுப்படுத்தவும் மற்றும் உலகளாவிய தொழில்துறை பாதுகாப்பு சுற்றுச்சூழல் அமைப்பை உருவாக்கவும் AI-ஐப் பயன்படுத்துகிறது.
ஹைதராபாத்தைச் சேர்ந்த அப்போலியன் டைனமிக்ஸ் நிறுவனம், மணிக்கு 498 கி.மீ சான்றளிக்கப்பட்ட அதிகபட்ச வேகத்துடன் கூடிய இந்தியாவின் அதிவேக பல சுழலி (multirotor) ஆளில்லா வான்வழி வாகனமான (UAV) 'ஆஹுதி மார்க் II'-ஐ உருவாக்கியுள்ளது.
ஆஹுதி மார்க் II என்பது எதிரிகளின் ஆளில்லா விமானங்கள் மற்றும் சுற்றும் வெடிமருந்துகளைத் துரத்திச் சென்று அழிப்பதற்காக வடிவமைக்கப்பட்ட ஒரு மின்சார இடைமறிப்பு ஆளில்லா விமானமாகும்.