TNPSC Thervupettagam

TNPSC துளிகள்

May 16 , 2025 4 days 69 0
  • திருநெல்வேலியைச் சேர்ந்த திருநரான ரேணுகா என்பவர், வருடாந்திர கூத்தாண்டவர் விழாவையொட்டி விழுப்புரத்தில் நடைபெற்ற அழகிப் போட்டியில் கூவாகம் அழகிப் பட்டத்தினை வென்றார்.
  • முன்னாள் பாதுகாப்புத் துறைச் செயலாளர் அஜய் குமார், ஒன்றிய அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் (UPSC) புதியத் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார்.
  • இந்திய சூரிய சக்திக் கழகத்தின் (SECI) தலைவரும் அதன் நிர்வாக இயக்குநருமான இராமேஷ்வர் பிரசாத் குப்தாவை, அவரது பதவிக் காலம் முடிவதற்கு ஒரு மாதத்திற்கு முன்னதாகவே இந்திய அரசாங்கம் பதவி நீக்கியுள்ளது.
  • டொமினிகன் குடியரசில் நடைபெற்ற உலக சட்ட மாநாட்டில், உலக நீதிபதிகள் சங்கத்தின் (WJA) மதிப்பு மிக்க 'மெடல் ஆஃப் ஹானர்' விருதைப் பெற்ற முதல் இந்திய வழக்கறிஞர் புவன் ரிபு ஆவார்.
  • எலோன் மஸ்க்கின் ஸ்டார்லிங்க் நிறுவனமானது, இந்தியாவில் அதன் செயற்கைக் கோள் வழியிலான இணையச் சேவைகளை இயக்குவதற்காக தொலைத்தொடர்புத் துறையிடம்மிருந்து (DoT) உறுதிப்பாட்டு ஆவணத்தினை (Letter of Intent) பெற்றுள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்