இந்தியா முழுவதிலுமிருந்து 15 சிறந்த செவிலியர் நிபுணர்களுக்கு 2025 ஆம் ஆண்டு தேசியப் புளோரன்ஸ் நைட்டிங்கேல் என்ற விருதுகளை இந்தியக் குடியரசுத் தலைவர் வழங்கினார்.
99.7% என்ற கல்வியறிவு விகிதத்துடன், ULLAS - நவ் பாரத் சக்சார்த்த காரியக்ரம் (புதிய இந்தியக் கல்வியறிவுத் திட்டம்) திட்டத்தின் கீழ் கோவா மாநிலம் அதிகாரப் பூர்வமாக முழு கல்வியறிவு பெற்றதாக அம்மாநில முதல்வர் அறிவித்துள்ளார்.
செரீனா வில்லியம்ஸின் மகத்தானத் தொழில்முறை டென்னிஸ் வாழ்க்கைக்கான ஸ்பெயினின் 2025 ஆம் ஆண்டு பிரின்செஸ் ஆஃப் அஸ்டூரியாஸ் பரிசு (Spain's Princess of Asturias Prize) வழங்கப்பட்டுள்ளது.
சுவிட்சர்லாந்து நாட்டில் நடைபெற்ற மாற்றுத் திறனாளிகளுக்கான நோட்வில் உலக தடகள கிராண்ட் பிரிக்ஸ் போட்டியின் ஆடவர் ஈட்டி எறிதல் F42 பிரிவில் இந்தியாவின் மகேந்திர குர்ஜார் 61.17 மீட்டர் தூரம் ஈட்டி எறிந்து உலக சாதனைப் படைத்துள்ளார்.
போர்ச்சுகல்லின் கிறிஸ்டியானோ ரொனால்டோ தனது கால்பந்தாட்டப் போட்டிகளில் 800 கிளப் கோல்களை அடித்த உலகின் முதல் வீரராக உருவெடுத்துள்ளார்.
இந்திய வம்சாவளியைச் சேர்ந்த ஒரு பாடகரும், பாடலாசிரியருமான இராஜ குமாரி அமெரிக்க இசை விருதை (AMA) வென்ற முதல் இந்திய வம்சாவளி இசைக்கலைஞர் என்ற பெருமையினைப் பெற்றுள்ளார்.
பாலியல் தொழிலாளர்கள் எதிர்கொள்ளும் பாலியல் சுரண்டல் / கடும் துன்புறுத்தல் நிலைமைகளை வெளிக்கொணச் செய்யவும், அவர்களின் சகிப்புத் தன்மையை நன்கு மதிப்பதற்காகவும் ஜூன் 02 ஆம் தேதியானது ஆண்டுதோறும் சர்வதேசப் பாலியல் தொழிலாளர்கள் தினமாக அனுசரிக்கப்படுகிறது.