விமானப்படையின் படைத் தலைவர் மனிஷா, இந்தியாவில் (மிசோரம்) ஆளுநருக்கு ஒரு உதவியாளராக (ADC) நியமிக்கப்பட்ட இந்தியாவின் முதல் மகளிர் இந்திய ஆயுதப் படை அதிகாரி ஆனார்.
இந்திய ரிசர்வ் வங்கியின் திருத்தப்பட்ட விதிமுறைகளின் கீழ், 2.5 லட்சம் ரூபாய்க்கும் குறைவான தங்க நகைக் கடன்களுக்கான கடன்-மதிப்பு (LTV) விகித வரம்பானது 75 சதவீதத்திலிருந்து 85% ஆக உயர்த்தப்பட்டுள்ளது.
மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகமானது Ikigai Law மற்றும் IndiaAI திட்டத்துடன் இணைந்து, யுனெஸ்கோ அமைப்பின் தெற்காசியாவிற்கான பிராந்திய அலுவலகம் ஆனது, செயற்கை நுண்ணறிவு தயார்நிலை மதிப்பீட்டு முறை (RAM) குறித்த ஐந்தாவது மற்றும் இறுதி பங்குதாரர் ஆலோசனையை நடத்தியது.
எலோன் மஸ்க்கின் ஸ்டார்லிங்க் நிறுவனமானது, Eutelsat OneWeb மற்றும் Jio Satellite Communications ஆகியவற்றிற்கு அடுத்தபடியாக நமது நாட்டில் செயற்கைக்கோள் வழி வகையிலான இணையதளச் சேவைகளை வழங்குவதற்காக தொலைத்தொடர்புத் துறையிடம் இருந்து உரிமத்தைப் பெற்றுள்ள மூன்றாவது நிறுவனமாக மாறியுள்ளது.
நீடித்த மற்றும் நிலையான திட்டங்களுக்கு நிதியளிப்பதை எளிதாக்குவதற்கும் SDG இலக்குகளுக்கான இடைவெளியைக் குறைப்பதற்கும், சமூக, நிலைத்தன்மை மற்றும் நிலைத்தன்மையுடன் இணைக்கப்பட்ட பத்திரங்கள் உள்ளிட்ட சுற்றுச்சூழல், சமூக மற்றும் ஆளுகை (ESG) கடன் பத்திரங்களுக்கான செயல்பாட்டுக் கட்டமைப்பை SEBI அறிமுகப்படுத்தியுள்ளது.
2026 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் முதல் ஒரு இரண்டு ஆண்டுகளுக்கு பஹ்ரைன், கொலம்பியா, ஜனநாயகக் காங்கோ குடியரசு, லாத்வியா மற்றும் லைபீரியா ஆகிய நாடுகள் ஐக்கிய நாடுகள் பாதுகாப்புச் சபையின் நிரந்தரமற்ற உறுப்பினர்களாகப் செயலாற்றத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளன.
வங்காளதேசத்தின் இடைக்கால அரசாங்கமானது, 2022 ஆம் ஆண்டு சட்டத்தினை மாற்றியமைத்து, ஷேக் முஜிபுர் ரஹ்மானை 'தேசத்தின் தந்தை' என்று குறிப்பிடுவதை நீக்கியுள்ளது.