சென்னை மெட்ரோ ரயில் நிறுவனமானது, 2026 ஆம் ஆண்டிற்கான GEEF (உலகளாவிய ஆற்றல் மற்றும் சுற்றுச்சூழல் அறக்கட்டளை) உலகளாவிய சுற்றுச்சூழல் மேன்மை விருதுகளில், மெட்ரோ ரயில் பிரிவில் "ஆண்டின் சிறந்த உலகளாவிய சுற்றுச்சூழல் தலைமைத்துவத் திட்டம் 2026" விருதை வென்றுள்ளது.
நகர்ப்புற வானிலை முன்னறிவிப்பு மற்றும் பருவநிலை ஆராய்ச்சியை மேம்படுத்துவதற்காக, இந்தியாவின் முதல் நகர்ப்புற வானிலை சோதனைத் தளம் மற்றும் காற்றூர்தித் துகள் ஆய்வகம் சென்னையில் தொடங்கப்பட்டது.
லெப்டினன்ட் ஜெனரல் என்.எஸ். ராஜா சுப்ரமணி (பணி நிறைவு) இந்தியாவின் அடுத்த பாதுகாப்புப் படைத் தலைவராக (CDS) நியமிக்கப்பட்டுள்ளதுடன் ஜெனரல் அனில் சவுகான் பதவிக்காலம் முடிந்த பிறகு, 2026 ஆம் ஆண்டு மே 30 அன்று பொறுப்பேற்பார்.
தேசியக் குற்ற ஆவணக் காப்பகம் (NCRB) வெளியிட்ட 'இந்தியாவில் தற்செயலான மரணங்கள் மற்றும் தற்கொலைகள் (ADSI) 2024' அறிக்கையின்படி, 2024 ஆம் ஆண்டில் இந்தியாவில் 1,70,746 தற்கொலைகள் பதிவாகியுள்ளன.
அருணாச்சல பிரதேசத்தில் உள்ள டி'எரிங் நினைவு வனவிலங்கு சரணாலயத்தில் சுமார் 20 ஆண்டுகளுக்குப் பிறகு ராயல் பெங்கால் புலி ஒன்று தென்பட்டது.
கருப்பை புற்றுநோய் மற்றும் ஆரம்பகால நோயறிதல் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்த ஒவ்வொரு ஆண்டும் மே 8 அன்று உலக கருப்பை புற்றுநோய் தினம் அனுசரிக்கப் படுகிறது.
2026 ஆம் ஆண்டிற்கான கருத்துரு "No Woman Left Behind" என்பதாகும்.
தாய்மார்கள் மற்றும் தாய்வழி உருவங்களின் அன்பு மற்றும் பங்களிப்பைப் போற்றும் வகையில், 2026 ஆம் ஆண்டு அன்னையர் தினம் மே மாதத்தின் இரண்டாவது ஞாயிற்றுக் கிழமையான மே 10 அன்று அனுசரிக்கப்பட்டது.