TNPSC Thervupettagam

TNPSC துளிகள்

July 4 , 2026 4 days 68 0
  • ஜாரெட் குஷ்னரின் ஆதரவுடன் வியோசா-நார்டா பாதுகாக்கப்பட்ட பகுதியில் அமைக்கப் படும் ஆடம்பர விடுதித் திட்டத்திற்கு எதிராக அல்பேனியா நாட்டில் 'ஃபிளமிங்கோ புரட்சி' நடைபெற்று வருகிறது.
    • சுற்றுச்சூழல் கவலைகள் காரணமாக தொடங்கிய இந்தப் போராட்டங்கள் தற்போது பொறுப்புக் கூறலுக்கான பரந்த கோரிக்கைகளாக விரிவடைந்துள்ளன; இத்திட்டம் அமையும் பகுதியானது ஃபிளமிங்கோக்கள் மற்றும் 70-க்கும் மேற்பட்ட அழிந்து வரும் உயிரினங்களின் புகலிடமாக உள்ளது.
  • சீஷெல்ஸ் நாட்டிற்கான அரசு முறைப் பயணத்தின் போது, பிரதமர் நரேந்திர மோடிக்கு அந்நாட்டின் உயரிய விருதான "கார்டியன் ஆஃப் தி ப்ளூ ஹொரைசன்" (Guardian of the Blue Horizon) வழங்கப்பட்டது.
  • பிராந்திய தடுப்பு மற்றும் இந்தோ-பசிபிக் பாதுகாப்பை வலுப்படுத்துவதற்காக, மேற்கு பசிபிக் பெருங்கடலில் 'வாலியண்ட் ஷீல்ட் 2026' மற்றும் 'ரெசல்யூட் டிராகன் 26' ஆகிய ராணுவப் பயிற்சிகளை அமெரிக்கா தொடங்கியுள்ளது.
    • வாலியண்ட் ஷீல்ட் 2026 பயிற்சியில் அமெரிக்கா, ஜப்பான், ஆஸ்திரேலியா, கனடா மற்றும் நியூசிலாந்து ஆகியவை ஈடுபடுகின்றன; அதேவேளையில் ரெசல்யூட் டிராகன் 26 என்பது தீவுப் பாதுகாப்பு, கூட்டுத் தலைமை மற்றும் பல-கள செயல்பாடுகளை மையமாகக் கொண்ட அமெரிக்க-ஜப்பான் கூட்டுப் பயிற்சி ஆகும்.
  • ஜெர்மனியின் ஹாம்பர்க்கில் நடைபெற்ற ஹாம்பர்க் நீடித்த நிலைத்தன்மை மாநாடு (HSC) 2026-இல், ஐக்கிய நாடுகள் சபையின் (UN) 2026 ஆம் ஆண்டிற்கான நீடித்த வளர்ச்சி அறிக்கை வெளியிடப்பட்டது.
    • இது உலகளாவிய வடக்கு மற்றும் உலகளாவிய தெற்கு நாடுகளுக்கிடையேயான ஒத்துழைப்பின் மூலம் நீடித்த வளர்ச்சி இலக்குகளை (SDGs) செயல்படுத்துவதை ஊக்குவிக்கும் ஒரு வருடாந்திர சர்வதேச பல-பங்குதாரர் மன்றமாகும்.
  • சீஷெல்ஸ் நாட்டின் 50-வது சுதந்திர தினக் கொண்டாட்டங்களில் பிரதமர் நரேந்திர மோடி சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டார்; இதன்மூலம் இந்தச் சிறப்பைப் பெறும் முதல் இந்தியப் பிரதமர் என்ற பெருமையைப் பெற்றுள்ளார்.
    • 1976 ஆம் ஆண்டு ஜூன் 29 அன்று ஐக்கிய பேரரசிடமிருந்து (UK) சீஷெல்ஸ் சுதந்திரம் பெற்றது; 2026 ஆம் ஆண்டானது அதன் சுதந்திரம் மற்றும் இந்தியா-சீஷெல்ஸ் இராஜதந்திர உறவுகளின் 50-வது ஆண்டைக் குறிக்கிறது.
  • இந்தியா, சிங்கப்பூர் மற்றும் மலேசியா இடையே டிஜிட்டல் இணைப்பை வலுப்படுத்துவதற்காக, I-2SEA (இந்தியா-சிங்கப்பூர்-மலேசியா) கடலடி கம்பிவடத் திட்டமானது 2026 ஆம் ஆண்டு ஜூலை 2 அன்று வெளியிடப்பட்டது.
    • 3,600 கி.மீ நீளமுள்ள இந்த ஒளியிழை கடலடி கம்பிவடத் திட்டம் இந்தியாவில் மச்சிலிப்பட்டினம் (ஆந்திரப் பிரதேசம்) மற்றும் தென் சென்னை (தமிழ்நாடு) ஆகிய இடங்களில் தரை நிலையங்களைக் கொண்டிருக்கும்.
  • 1949 ஆம் ஆண்டு இந்திய பட்டயக் கணக்காளர்கள் நிறுவனம் (ICAI) நிறுவப்பட்டதைக் குறிக்கும் வகையில் ஒவ்வொரு ஆண்டும் ஜூலை 1 ஆம் தேதி பட்டயக் கணக்காளர்கள் (CA) தினம் அனுசரிக்கப்படுகிறது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்