ஜாரெட் குஷ்னரின் ஆதரவுடன் வியோசா-நார்டா பாதுகாக்கப்பட்ட பகுதியில் அமைக்கப் படும் ஆடம்பர விடுதித் திட்டத்திற்கு எதிராக அல்பேனியா நாட்டில் 'ஃபிளமிங்கோ புரட்சி' நடைபெற்று வருகிறது.
சுற்றுச்சூழல் கவலைகள் காரணமாக தொடங்கிய இந்தப் போராட்டங்கள் தற்போது பொறுப்புக் கூறலுக்கான பரந்த கோரிக்கைகளாக விரிவடைந்துள்ளன; இத்திட்டம் அமையும் பகுதியானது ஃபிளமிங்கோக்கள் மற்றும் 70-க்கும் மேற்பட்ட அழிந்து வரும் உயிரினங்களின் புகலிடமாக உள்ளது.
சீஷெல்ஸ் நாட்டிற்கான அரசு முறைப் பயணத்தின் போது, பிரதமர் நரேந்திர மோடிக்கு அந்நாட்டின் உயரிய விருதான "கார்டியன் ஆஃப் தி ப்ளூ ஹொரைசன்" (Guardian of the Blue Horizon) வழங்கப்பட்டது.
பிராந்திய தடுப்பு மற்றும் இந்தோ-பசிபிக் பாதுகாப்பை வலுப்படுத்துவதற்காக, மேற்கு பசிபிக் பெருங்கடலில் 'வாலியண்ட் ஷீல்ட் 2026' மற்றும் 'ரெசல்யூட் டிராகன் 26' ஆகிய ராணுவப் பயிற்சிகளை அமெரிக்கா தொடங்கியுள்ளது.
வாலியண்ட் ஷீல்ட் 2026 பயிற்சியில் அமெரிக்கா, ஜப்பான், ஆஸ்திரேலியா, கனடா மற்றும் நியூசிலாந்து ஆகியவை ஈடுபடுகின்றன; அதேவேளையில் ரெசல்யூட் டிராகன் 26 என்பது தீவுப் பாதுகாப்பு, கூட்டுத் தலைமை மற்றும் பல-கள செயல்பாடுகளை மையமாகக் கொண்ட அமெரிக்க-ஜப்பான் கூட்டுப் பயிற்சி ஆகும்.
ஜெர்மனியின் ஹாம்பர்க்கில் நடைபெற்ற ஹாம்பர்க் நீடித்த நிலைத்தன்மை மாநாடு (HSC) 2026-இல், ஐக்கிய நாடுகள் சபையின் (UN) 2026 ஆம் ஆண்டிற்கான நீடித்த வளர்ச்சி அறிக்கை வெளியிடப்பட்டது.
இது உலகளாவிய வடக்கு மற்றும் உலகளாவிய தெற்கு நாடுகளுக்கிடையேயான ஒத்துழைப்பின் மூலம் நீடித்த வளர்ச்சி இலக்குகளை (SDGs) செயல்படுத்துவதை ஊக்குவிக்கும் ஒரு வருடாந்திர சர்வதேச பல-பங்குதாரர் மன்றமாகும்.
சீஷெல்ஸ் நாட்டின் 50-வது சுதந்திர தினக் கொண்டாட்டங்களில் பிரதமர் நரேந்திர மோடி சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டார்; இதன்மூலம் இந்தச் சிறப்பைப் பெறும் முதல் இந்தியப் பிரதமர் என்ற பெருமையைப் பெற்றுள்ளார்.
1976 ஆம் ஆண்டு ஜூன் 29 அன்று ஐக்கிய பேரரசிடமிருந்து (UK) சீஷெல்ஸ் சுதந்திரம் பெற்றது; 2026 ஆம் ஆண்டானது அதன் சுதந்திரம் மற்றும் இந்தியா-சீஷெல்ஸ் இராஜதந்திர உறவுகளின் 50-வது ஆண்டைக் குறிக்கிறது.
இந்தியா, சிங்கப்பூர் மற்றும் மலேசியா இடையே டிஜிட்டல் இணைப்பை வலுப்படுத்துவதற்காக, I-2SEA (இந்தியா-சிங்கப்பூர்-மலேசியா) கடலடி கம்பிவடத் திட்டமானது 2026 ஆம் ஆண்டு ஜூலை 2 அன்று வெளியிடப்பட்டது.
3,600 கி.மீ நீளமுள்ள இந்த ஒளியிழை கடலடி கம்பிவடத் திட்டம் இந்தியாவில் மச்சிலிப்பட்டினம் (ஆந்திரப் பிரதேசம்) மற்றும் தென் சென்னை (தமிழ்நாடு) ஆகிய இடங்களில் தரை நிலையங்களைக் கொண்டிருக்கும்.
1949 ஆம் ஆண்டு இந்திய பட்டயக் கணக்காளர்கள் நிறுவனம் (ICAI) நிறுவப்பட்டதைக் குறிக்கும் வகையில் ஒவ்வொரு ஆண்டும் ஜூலை 1 ஆம் தேதி பட்டயக் கணக்காளர்கள் (CA) தினம் அனுசரிக்கப்படுகிறது.