கொலம்பியாவின் சோகோவில் உள்ள சான் ஜோஸ் டெல் பால்மர் அருகே 7.4 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டது, இதில் குறைந்தது 164 பேர் உயிரிழந்தனர் மற்றும் காலி மற்றும் பெரேராவில் பெரும் சேதம் ஏற்பட்டது.
தமிழ்நாட்டின் தூத்துக்குடியில் உள்ள வ.உ.சிதம்பரனார் துறைமுகம், Scope-2 உமிழ்வற்ற நிலையை அடைந்த இந்தியாவின் முதல் பெரிய துறைமுகமாக உருவெடுத்துள்ளது.
2025-26 ஆம் ஆண்டில் அதன் மின்சாரத் தேவைகளில் 93.89 சதவீதத்தை புதுப்பிக்கத்தக்க ஆற்றல் பூர்த்தி செய்தது, மேலும் இத்துறைமுகம் ISO 50001:2018 ஆற்றல் மேலாண்மை அமைப்புச் சான்றிதழைப் பெற்ற முதல் இந்தியப் பெருந்துறைமுகமாக மாறியது.
இந்திய தொழில்நுட்பக் கழகம் டெல்லியின் சோனிபட் வளாகத்தில் செயற்கை நுண்ணறிவு (AI) மூலம் இயங்கும் உயர் செயல்திறன் கொண்ட கணினி வசதியான 'பரம் பிரக்யா' (Param Pragya) என்பதை இந்தியப் பிரதமர் திறந்து வைத்தார்.
தமிழ்நாட்டின் கொல்லிமலையில், டெரிடேசி குடும்பம் மற்றும் டெரிஸ் பேரினத்தைச் சேர்ந்த 'டெரிஸ் மதுசூதனனி' (Pteris madhusoodananii) என்ற புதிய பெரணி இனம் கண்டுபிடிக்கப்பட்டது.
டிரினிடாட் மற்றும் டொபாகோவைச் சேர்ந்த மற்றும் ஸ்டீல் டிரம் என்று அழைக்கப் படும் இசைக்கருவியான ஸ்டீல்பேனின் கலாச்சார பாரம்பரியத்தை மேம்படுத்துவதற்காக ஒவ்வொரு ஆண்டும் ஆகஸ்ட் 11 அன்று உலக ஸ்டீல்பேன் தினம் அனுசரிக்கப்படுகிறது.
2026 ஆம் ஆண்டிற்கான கருத்துரு "Rhythm and Rise: Youth. Discipline. Culture. Community." என்பதாகும்.