அமெரிக்காவின் செயின்ட் லூயிஸில் நடைபெற்ற இறுதிப் போட்டியில் ஃபேபியானோ
கருவானாவை (அமெரிக்கா) 15–13 என்ற கணக்கில் தோற்கடித்து கிராண்ட் செஸ் டூரை (GCT) வென்ற முதல் இந்தியர் என்ற பெருமையை R. பிரக்ஞானந்தா பெற்றார்.
உத்தரப் பிரதேச மாநிலம் அமேதியில் உள்ள கோர்வா ஆயுத தொழிற்சாலையில் இந்தியாவின் முதல் 100% உள்நாட்டுத் தயாரிப்பான ஏ.கே-203 ‘ஷேர்’ தாக்குதல் துப்பாக்கி வெற்றிகரமாகத் தயாரிக்கப்பட்டு சோதனை செய்யப்பட்டது.
இந்த துப்பாக்கியானது 2019 ஆம் ஆண்டில் நிறுவப்பட்ட இந்தியா-ரஷ்யா கூட்டு நிறுவனமான இந்தோ-ரஷ்யன் ரைஃபிள்ஸ் பிரைவேட் லிமிடெட் (IRRPL) மூலம் தயாரிக்கப் படுகிறது.
இந்திய தொழில்நுட்பக் கழகம் மெட்ராஸ், ஏரோஸ்பைக் முனையுடன் கூடிய இந்தியாவின் முதல் உள்நாட்டு 5 kN காற்று உள்ளிழுக்கும் சுழலும் வெடிப்பு இயந்திரத்தை (RDE) வெற்றிகரமாகச் சோதித்து இதனால்நீடித்த அழுத்த அதிகரிப்பு எரிப்பு மூலம் நிலையான 5 kN உந்துவிசையை அடைந்தது.
புது தில்லியில் CSIR-தேசிய விண்வெளி ஆய்வகம் (CSIR-NAL) NJ-05 (5 கிலோ உந்துதல்), NJ-50 (50 கிலோ உந்துதல்) மற்றும் NJ-100 (100 கிலோ உந்துதல்) ஆகிய மூன்று உள்நாட்டு நுண் மற்றும் சிறிய எரிவாயு விசையாழி இயந்திரங்களை வெளியிட்டது.
புது தில்லியில், குடியரசு துணைத் தலைவர் சி. பி. ராதாகிருஷ்ணன் அவர்கள் GNANI AI ஆல் உருவாக்கப்பட்ட இறையாண்மை கொண்ட செயற்கை நுண்ணறிவு (AI) கட்டமைப்பான 'ஞானி அர்த்தா'-வை அறிமுகப்படுத்தினார்.
இது Evon 3.3 என்ற பெரும் மொழி மாதிரி (LLM) மற்றும் செயற்கை நுண்ணறிவை நிஜ உலகப் பணிகள் மற்றும் நிறுவனங்களுடன் இணைக்கும் தளமான பிளெக்ஸஸ் (Plexus) ஆகியவற்றைக் கொண்டுள்ளது.
புதிய தரவு மைய முதலீடுகளின் ஆதரவோடு, மும்பை மற்றும் சென்னைக்குப் பிறகு இந்தியாவின் மூன்றாவது சர்வதேச கடலடி கேபிள் நுழைவாயிலாக ஆந்திரப் பிரதேசம் மாற உள்ளது.
உலக சமஸ்கிருத தினம் ஒவ்வொரு ஆண்டும் ஷ்ரவண பூர்ணிமா அன்று அனுசரிக்கப் படுகிறது; சமஸ்கிருத மொழியையும் அதன் கலாச்சார பாரம்பரியத்தையும் மேம்படுத்தவும் பாதுகாக்கவும் 2026 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 28 அன்று இது அனுசரிக்கப் பட்டது.
மத்திய கல்வி அமைச்சகம் வெளியிட்ட அறிவிப்புகளைத் தொடர்ந்து, 1969 ஆம் ஆண்டு முதல் இந்தியாவில் சமஸ்கிருத தினம் அதிகாரப்பூர்வமாக அனுசரிக்கப் படுகிறது.