2020 – 21 ஆம் ஆண்டில் இந்தியாவானது கிட்டத்தட்ட 20 மில்லியன் டன் எடையுள்ள உணவு தானியங்களை ஏற்றுமதி செய்துள்ளதோடு, 92 மில்லியன் டன் எடையுள்ள அரிசி மற்றும் கோதுமை ஆகியவற்றை விநியோகித்து ஒரு சாதனையையும் படைத்து உள்ளது.
மத்திய அரசின் கிடங்கிலிருந்து விநியோகிக்கப்பட்ட 92 மில்லியன் டன் உணவு தானியங்களில்,
தேசிய உணவுப் பாதுகாப்புச் சட்டம் மற்றும் இதர பிற நலத் திட்டங்களின் கீழ் 60.32 மில்லியன் டன் தானியங்களும்,
பிரதான் மந்திரி கரிப் கல்யாண் அன்ன யோஜனா, ஆத்ம நிர்பார் பாரத் திட்டம் (திரும்பி வரும் இடம்பெயர்ந்த தொழிலாளர்களுக்காக) மற்றும் கோவிட்-19 பெருந்தொற்றுக் காலத்தில் தொடங்கப்பட்ட வேறு சில திட்டங்களின் கீழ் 31.52 மில்லியன் டன் தானியங்களும் விநியோகிக்கப்பட்டுள்ளன.
2020-21 ஆம் ஆண்டில் பொது விநியோக முறை (PDS - Public distribution system) மூலம் விநியோகிக்கப்பட்ட மொத்த தானியங்களின் அளவானது மற்ற சாதாரண ஆண்டுகளைக் காட்டிலும் கிட்டத்தட்ட 50% அதிகமாகும்.