TNPSC Thervupettagam

அருகலை வழியாக பேச்சுத் தொடர்பு

December 17 , 2019 2069 days 705 0
  • இந்தியாவில் முதல்முறையாக பாரதி ஏர்டெல் நிறுவனமானது அருகலை வழியாக பேச்சுத் தொடர்பை (Voice over Wi-Fi - VoWiFi) அறிமுகப் படுத்தியுள்ளது.
  • இது உயர் தெளிவுத் திறன் கொண்ட (high definition - HD) குரல் அழைப்புகளை மேற்கொள்ள மற்றும் குரல் அழைப்புகளைப் பெற அகலப் பட்டையின் மூலம் கிடைக்கக் கூடிய அதிவேக இணைய இணைப்பைப் பயன்படுத்துகின்றது.
  • அருகலை வசதியைப் பயன்படுத்துவதால் பயனர்கள் இந்த அழைப்புகளுக்கு கூடுதல் கட்டணம் எதுவும் செலுத்த வேண்டியதில்லை.
  • இது குறிப்பாக செல்லிடப் பேசி அமைப்புகள் வலுவாக இல்லாத பகுதிகளுக்கு அருகலை வழியாக பேச்சுத் தொடர்பு வசதியை வழங்குவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்