இந்தியாவின் குஜராத்தில் உள்ள பர்தா வனவிலங்கு சரணாலயம் என்பது, ஆசிய சிங்கங்களின் இரண்டாவது இயற்கை வாழ்விடமாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப் பட்டுள்ளது.
குஜராத் முதலமைச்சர் பூபேந்திர படேல், 2026 ஆம் ஆண்டிற்கான சர்வதேச பெரும் பூனைகள் கூட்டமைப்பு உச்சிமாநாட்டின் முதல் முன்னோட்ட நிகழ்வை காணொளி வாயிலாகத் தொடங்கி வைத்தார்.
புது தில்லியில் நடைபெற உள்ள 2026 ஆம் ஆண்டிற்கான சர்வதேச பெரும் பூனைகள் கூட்டமைப்பு உச்சி மாநாட்டிற்கான ஆயத்தப் பணிகளின் ஒரு பகுதியாக, சிங்கப் பாதுகாப்பு குறித்த இந்த முன்னோட்ட நிகழ்வை சுற்றுச்சூழல், வனம் மற்றும் பருவநிலை மாற்ற அமைச்சகம் சாசன் கிர் என்ற இடத்தில் ஏற்பாடு செய்திருந்தது.
குஜராத்தில் சிங்கங்களின் எண்ணிக்கை 1991-ஆம் ஆண்டில் 284 ஆக இருந்தது, இன்று 891 ஆக அதிகரித்துள்ளது.