மத்திய மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகத்தின் கீழ் உள்ள சிறப்புப் பயன்பாட்டுக் குழுவான இந்திய மின் ஆளுமை பொதுச் சேவை நிறுவனங்களானவை ஆதார் விவரங்களைப் பதிவு செய்யும் பணிகளை மீண்டும் தொடங்கியுள்ளன.
ஆதார் அட்டையானது இப்போது முதன்மை அடையாள ஆவணமாக பயன்படுத்தப் படுகின்றது.
சிறப்புப் பயன்பாட்டுக் குழுவான பொதுச் சேவை நிறுவனங்களானவை, தனித்துவமான அடையாள அட்டை வைத்திருப்பவர்களின் ஆதார் விவரங்களைப் பதிவு செய்தல், திருத்தங்கள் செய்தல் மற்றும் சுயவிவரத்தில் மாற்றங்கள் செய்தல் தொடர்பாக இந்தியத் தனித்துவ அடையாள ஆணையத்துடன் (Unique Identification Authority of India - UIDAI) ஒரு ஒப்பந்தம் செய்துள்ளது.