TNPSC Thervupettagam

ஆந்திரப் பிரதேசத்தில் கண்டெடுக்கப்பட்ட விஜயநகரக் கல்வெட்டுகள்

June 26 , 2026 2 days 22 0
  • திருப்பதி சேஷாச்சலம் வனப்பகுதியில் உள்ள சதாசிவகோனாவில் 16-ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த மூன்று அரிய கல்வெட்டுகளை இந்திய தொல்லியல் துறை (ASI) கண்டுபிடித்துள்ளது.
  • இந்தக் கல்வெட்டுகள் விஜயநகர மன்னர் சதாசிவ ராயரின் ஆட்சிக் காலத்தைச் சேர்ந்தவை மற்றும் இவை கி.பி. 1554 ஆம் ஆண்டு ஜூலை மாதம் 31-ஆம் தேதியிட்டவை ஆகும்.
  • இவை தெலுங்கு, தமிழ் மற்றும் கன்னடம் ஆகிய மொழிகளில் எழுதப்பட்டுள்ளன; இது விஜயநகர நிர்வாகத்தின் பன்மொழித் தன்மையைக் காட்டுகிறது.
  • இக்கல்வெட்டுத் தகவல்கள், பாபவிநாசத்தில் ஒரு சிவன் கோவில் மற்றும் மடம் கட்டப் பட்டதையும், கோவில் வழிபாட்டிற்கான நில மானியங்களையும் பதிவு செய்கின்றன.
  • குடிமல்லம் கோவில் (பரசுராமேஸ்வரர் கோவில்) நிலங்களை மதச் சேவைகள் மற்றும் அன்னதானத்திற்காக ஒதுக்கியது குறித்தும் இவை குறிப்பிடுகின்றன.

 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்