TNPSC Thervupettagam

ஆயுஷ்மான் பாரத் – டிஜிட்டல் திட்டம்

November 14 , 2021 1295 days 651 0
  • மத்திய சுகாதார அமைச்சகமானது, சுகாதார ஆவணங்களை டிஜிட்டல் மயமாக்கம் செய்வதற்காக அனைத்து மருத்துவமனைகள் மற்றும் அனைத்து மருத்துவர்கள் குறித்தத் தகவல்களையும் ஆயுஷ்மான் பாரத்-டிஜிட்டல் திட்டத்தின் கீழ் டிஜிட்டல்  முறையில் பதிவு செய்யத் தொடங்கியுள்ளது.
  • இந்த முயற்சியின் கீழ், மருத்துவமனைத் தகவல் மேலாண்மை அமைப்பு மீதான  மென்பொருள் என்ற ஒன்றை வாங்குமாறு அனைத்து அரசு மருத்துவமனைகளிடம் கூறப்பட்டு உள்ளது.
  • இத்திட்டத்தின் கீழ், ஒவ்வொரு இந்தியருக்கும் ஒரு தனிப்பட்ட சுகாதார அடையாள அட்டையானது வழங்கப்படும்.
  • இதன் மூலம், குடிமக்கள் ஒரு பொத்தானை அழுத்துவதன் மூலம் சுகாதார வசதிகளைப் பெற இயலும்.
  • இந்தத் திட்டமானது சுகாதாரம் மற்றும் குடும்ப நலத் துறை அமைச்சகத்தின் கீழ் தேசிய சுகாதார ஆணையத்தினால் செயல்படுத்தப் படும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்