3, 5, 8 மற்றும் 10 ஆம் வகுப்புகளுக்கு 3 வருட சுழற்சிக்கால அடிப்படையில் மாதிரி சார்ந்த ஒரு தேசியச் சாதனைக் கணக்கெடுப்பினை மேற்கொள்ள இந்திய அரசு தயாராக உள்ளது.
இது இந்தியா முழுவதுமுள்ள மத்திய அரசுப் பள்ளிகள், மாநில அரசுப் பள்ளிகள், அரசு உதவி பெறும் பள்ளிகள் மற்றும் தனியார் பள்ளிகள் உள்ளிட்ட ஒட்டு மொத்தப் பள்ளிகளிலும் மேற்கொள்ளப்பட உள்ளது.
இது போன்ற முந்தையக் கணக்கெடுப்பானது 2017 ஆம் ஆண்டில் மேற்கொள்ளப் பட்டது.
இந்த ஆய்வானது கோவிட்-19 பெருந்தொற்றின் போது ஏற்பட்ட கற்றல் தடைகள் மற்றும் புதிய கற்றல் முறைகளை மதிப்பிடுவதில் உதவும்.
தேசியக் கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி மையமானது சாதன உருவாக்கம், சோதனை, பள்ளிகளின் மாதிரிச் சேமிப்பு மற்றும் சோதனைகளை இறுதியாக்கம் செய்தல் போன்ற பணிகளை செய்துள்ளது.
ஆனால் மாதிரி சேகரிக்கப்பட்டப் பள்ளிகளில் சோதனை குறித்த உண்மையான நிர்வாகத்தை மத்திய இடைநிலைக் கல்வி வாரியமானது மேற்கொள்ளும்.