இந்திய ரிசர்வ் வங்கியின் 6வது பண வரவுக் கணக்கெடுப்பு
June 6 , 2025 3 days 30 0
2023-24 ஆம் ஆண்டில் வெளிநாட்டிலிருந்து இந்தியாவிற்கு அனுப்பப்படும் பணத்தின் பங்கு 118.7 பில்லியன் டாலரை எட்டி புதிய சாதனை படைத்துள்ளது.
இது அந்நிய நேரடி முதலீட்டு வரவினை விட அதிகமாக இருப்பதோடு மட்டுமல்லாமல், இந்தியாவின் வணிகப் பற்றாக்குறையில் பாதிக்கும் மேலான அளவில் பங்கினையும் வழங்குகிறது.
அமெரிக்காவிலிருந்து இந்தியாவிற்கு அனுப்பப்படும் பண வரவின் பங்கு 27.7% ஆகும்.
இது ஐந்தாவது சுற்றுக் (2020-21) கணக்கெடுப்பில் பதிவான 23.4 சதவீதத்திலிருந்து அதிகரிப்பினைக் குறிக்கிறது.
பண வரவில் அமெரிக்கா, ஐக்கியப் பேரரசு, கனடா, ஆஸ்திரேலியா மற்றும் சிங்கப்பூர் ஆகியவை ஒருசேர 51.2% பங்கினைக் கொண்டுள்ளன.
அவை ஆறு GCC நாடுகளின் (37.9%) ஒட்டுமொத்தப் பங்கை ஒரு பெரிய வித்தியாசத்தில் முந்தியுள்ளன.
2023-24 ஆம் ஆண்டில், 5 லட்சம் ரூபாய்க்கும் மேற்பட்ட மதிப்பிலான பரிமாற்றங்கள் மொத்தப் பண வரவு மதிப்பில் சுமார் 29% பங்கினைக் கொண்டுள்ளன.
2023-24 ஆம் ஆண்டில், எண்ணிம பணவரவு முறைகளில் இருந்து பெறப்பட்ட வரவுகள் சராசரியாக, அனைத்துப் பண வரவுப் பரிவர்த்தனைகளிலும் 73.5% பங்கைக் கொண்டு இருந்தன.
தற்போது இந்தியாவிற்கு 200 டாலர் அனுப்புவதற்கான சராசரிச் செலவினம் 4.9% ஆக உள்ளது என்பதோடு இது உலக சராசரியான 6.65 சதவீதத்தினை விடக் குறைவாகும்.
ஆனால் இது இன்னும் நிலையான மேம்பாட்டு இலக்கு அளவுருவான 3 சதவீதத்தினை விட அதிகமாக உள்ளது.
மகாராஷ்டிரா, கேரளா மற்றும் தமிழ்நாடு ஆகியவை மொத்தப் பண வரவு மதிப்பில் சுமார் 51% பங்கினைப் பெற்றுள்ளன.
பீகார், உத்தரப் பிரதேசம் மற்றும் இராஜஸ்தான் ஆகியவை மொத்தப் பண வரவு மதிப்பில் 6 சதவீதத்திற்கும் குறைவான பங்கைப் பெற்றுள்ளன.