இந்திய வரலாற்று மாநாட்டின் (Indian History Congress - IHC) 80வது அமர்வானது 2019 ஆம் ஆண்டு டிசம்பர் 28 ஆம் தேதி முதல் 30 ஆம் தேதி வரை வரை கேரளாவில் உள்ள கண்ணூரில் நடத்தப்பட்டது.
IHC ஆனது 1935 ஆம் ஆண்டில் நிறுவப்பட்டது.
இது தெற்காசியாவில் வாழும் தொழில்முறை வரலாற்றாசிரியர்களின் மிகப்பெரிய ஒரு சங்கமாகும்.
IHCயின் முதலாவது அமர்வானது 1935 ஆம் ஆண்டு பூனாவில் உள்ள பாரத் இதிஹாஸ் சன்ஷோதக் மண்டலில் நடைபெற்றது.
IHCயின் முக்கிய நோக்கங்கள் பின்வருமாறு:
இந்தியாவில் தயாரிக்கப்பட்ட வரலாற்றுப் படைப்புகளின் தரத்தை ஒழுங்குபடுத்துதல்,
நடுநிலையான மற்றும் ஆதாரப்பூர்வமான வரலாற்றை ஊக்குவித்தல் மற்றும்
சார்பு மற்றும் அரசியல் இல்லாத ஒரு நியாயமான மற்றும் விஞ்ஞானப் பூர்வமான வரலாற்றில் ஈடுபடுவது.
பாரத இதிஹாச சன்ஷோதக் மண்டல் ஆனது 1910 ஆம் ஆண்டில் புனேவில் கே சி மெஹெண்டேலின் ஆதரவுடன் விஸ்வநாத் காஷிநாத் ராஜ்வாடேவால் நிறுவப்பட்டது.