2019 - 2025 வரையிலான காலகட்டதிற்காக தேசிய உள்கட்டமைப்புத் தொடர் (National Infrastructure Pipeline - NIP) குறித்த பணிக் குழுவின் ஒரு அறிக்கையை மத்திய அரசு வெளியிட்டுள்ளது.
102 லட்சம் கோடி மதிப்பிலான தேசிய உள்கட்டமைப்புத் தொடர் என்ற ஒரு திட்டத்தை மத்திய நிதியமைச்சரான நிர்மலா சீதாராமன் வெளியிட்டுள்ளார்.
2019 - 20 முதல் 2024 - 25 வரையிலான இந்த திட்டத்திற்கான செயல்முறையைத் தயாரிப்பதற்கு பொருளாதார விவகாரங்கள் துறை செயலாளர் தலைமையில் பணிக் குழு ஒன்றை நிதி அமைச்சகம் அமைத்திருந்தது.
2020 முதல் 2025 வரையிலான நிதியாண்டுகளில், இந்தியாவில் உள்கட்டமைப்பில் எதிர்பார்க்கப்படும் மொத்த மூலதனச் செலவினங்களில் எரிசக்தி (24%), சாலைகள் (19%), நகர்ப்புறம் (16%), மற்றும் ரயில்வே (13%) போன்ற துறைகளில் 70% மூலதனச் செலவினம் இருக்கும் என்று எதிர்பார்க்கப் படுகின்றது.
மூலதனச் செலவினங்கள் 39:39:22 என்ற வரையறையின் படி, மத்திய, மாநிலங்கள் மற்றும் தனியார் துறை ஆகியவற்றினால் பகிர்ந்து கொள்ளப்பட இருக்கின்றது. இது 102 லட்சம் கோடிக்கு மேல் முதலீடு செய்வதற்கான திட்டங்களை கோடிட்டுக் காட்டியுள்ளது.