இந்தியக் கொடியின் விதிமுறைகள் என்பது இந்தியாவில் அதன் பயன்பாடு, காட்சிப் படுத்துதல் மற்றும் கொடியேற்றம் தொடர்பான சட்டங்கள் மற்றும் மரபுகளின் ஒரு தொகுப்பாகும்.
இது 2002 ஆம் ஆண்டு ஜனவரி 26 ஆம் தேதியன்று நடைமுறைக்குக் கொண்டு வரப் பட்டது.
2022 ஆம் ஆண்டு ஜூலை 20 ஆம் தேதியன்று இந்தியக் கொடியின் விதிமுறைகளை மத்திய அரசு திருத்தியமைத்தது.
தேசியக் கொடியானது, ஒரு திறந்த அல்லது பொது இடத்தில் ஏற்றப் பட்டால் பகல் மற்றும் இரவிலும் அதனைப் பறக்க விடுவதற்கு இது அனுமதி அளிக்கிறது.
முன்னதாக, மூவர்ணக் கொடியைச் சூரிய உதயம் மற்றும் சூரிய அஸ்தமனம் ஆகியவற்றிற்கு இடைப்பட்ட நேரத்தில் மட்டுமே ஏற்ற முடியும்.
2021 ஆம் ஆண்டு டிசம்பர் 30 ஆம் தேதியன்று வெளி வந்த முந்தையத் திருத்தத்தில், இயந்திரத்தால் நெய்யப்பட்ட மற்றும் பாலியஸ்டர் கொடிகளையும் சேர்த்து பயன்படுத்த அரசாங்கம் அனுமதித்தது.
இதற்கு முன்பு, இத்தகையக் கொடிகளைப் பயன்படுத்த அனுமதி இல்லை.