அண்டார்டிக் உடன்படிக்கையின் உறுப்பினராக, அதன் கீழ் வழங்கப்பட்டுள்ள கடமைகளின் காரணமாக 2022 ஆம் ஆண்டின் இந்திய அண்டார்டிகா மசோதாவினை மக்களவை நிறைவேற்றியது.
இது அண்டார்டிகா பகுதியில் உள்ள இராணுவப் படையை நீக்குதல், அப்பகுதியினை அணுசக்திச் சோதனைகளை மேற்கொள்ளாத மண்டலமாக மாற்றுதல், கதிரியக்கக் கழிவுகளை அகற்றுதல், மேலும், அப்பகுதியினை அமைதியான நோக்கங்களுக்காக மட்டுமே பயன்படுத்தப்படச் செய்வதை உறுதி செய்தல் ஆகியவற்றை நோக்கமாகக் கொண்டுள்ளது.
அண்டார்டிகா பகுதியில் சர்வதேச அறிவியல் ஒத்துழைப்பை ஊக்குவித்தல் மற்றும் பிராந்திய இறையாண்மை மீதான சர்ச்சைகளைப் புறந்தள்ளுதல் ஆகியவற்றை இது ஊக்குவிக்கிறது.
அண்டார்டிக் ஒப்பந்தம் 1959 ஆம் ஆண்டில் கையெழுத்திடப்பட்டு 1961 ஆம் ஆண்டில் நடைமுறைப் படுத்தப்பட்டது.
இந்தியா 1983 ஆம் ஆண்டில் இந்த ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டது.