TNPSC Thervupettagam

இந்தியா-ஜப்பான் உச்சிமாநாடு

July 6 , 2026 15 hrs 0 min 68 0
  • இரு நாடுகளுக்கும் இடையிலான சிறப்பு உத்திசார் மற்றும் உலகளாவிய கூட்டாண்மையை வலுப்படுத்துவதற்காக 16-வது இந்தியா-ஜப்பான் வருடாந்திர உச்சி மாநாடு புது தில்லியில் நடைபெற்றது.
  • இந்தியா மற்றும் ஜப்பான் ஆகியவை தங்கள் முதல் கூட்டுப் பாதுகாப்பு மேம்பாட்டுத் திட்டமான UNICORN (ஒருங்கிணைந்த கூட்டு ரேடியோ அலைவாங்கி) திட்டத்தில் உடன்பாடு கண்டதுடன், பாதுகாப்பு, கடல்சார் பாதுகாப்பு மற்றும் கூட்டு ராணுவ ஒத்துழைப்பு ஆகியவற்றை விரிவுபடுத்தவும் முடிவு செய்தன.
  • பொருளாதாரப் பாதுகாப்பு, தூய்மையான ஆற்றல், செயற்கை நுண்ணறிவு (AI), நெகிழ்ச்சியான விநியோகச் சங்கிலிகள் மற்றும் பசுமை ஹைட்ரஜன், உயிரிவாயு மற்றும் குறை கடத்திகள் ஆகியவற்றில் இரு நாடுகளும் ஒப்பந்தங்களை ஏற்றுக் கொண்டன.
  • விரிவான பொருளாதார கூட்டாண்மை ஒப்பந்தத்தின் (CEPA) மதிப்பாய்வை விரைவு படுத்தவும், இந்தியாவில் 10 டிரில்லியன் யென் மதிப்பிலான ஜப்பானிய முதலீட்டு இலக்கை நோக்கிப் பணியாற்றவும் அவை ஒப்புக் கொண்டன.
  • சுதந்திரமான மற்றும் திறந்த இந்தோ-பசிபிக் (FOIP), தென்கிழக்கு ஆசிய நாடுகளின் கூட்டமைப்பு (ASEAN) மற்றும் பல்துறை தொழில்நுட்ப மற்றும் பொருளாதார ஒத்துழைப்புக்கான வங்காள விரிகுடா முன்னெடுப்பு (BIMSTEC) ஆகியவற்றிற்கான ஆதரவு, Quad, சுதந்திரமான கடல்வழிப் போக்குவரத்து மற்றும் ஐக்கிய நாடுகளின் பாதுகாப்புச் சபை (UNSC) சீர்திருத்தங்கள் ஆகியவற்றிற்கான ஒத்துழைப்பை இரு நாடுகளும் மீண்டும் உறுதிப்படுத்தின.

 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்