TNPSC Thervupettagam

இந்தியா-நார்டிக் உச்சிமாநாடு 2026

May 22 , 2026 11 days 89 0
  • 3வது இந்தியா-நார்டிக் உச்சி மாநாடு நார்வேயின் ஒஸ்லோவில் நடைபெற்றது.
  • டென்மார்க், பின்லாந்து, ஐஸ்லாந்து, நார்வே மற்றும் ஸ்வீடன் ஆகியன ஐந்து நார்டிக் நாடுகள் ஆகும்.
  • இந்தியாவும் நார்டிக் நாடுகளும் தங்களது உறவை 'பசுமைத் தொழில்நுட்பம் மற்றும் கண்டுபிடிப்பு உத்திசார் கூட்டாண்மையாக' மேம்படுத்திக் கொண்டன.
  • இந்த உச்சிமாநாடு பசுமைத் தொழில்நுட்பம், தூய்மையான எரிசக்தி, செயற்கை நுண்ணறிவு (AI), கடல்சார் பாதுகாப்பு, விண்வெளி ஒத்துழைப்பு மற்றும் பருவநிலை நடவடிக்கை ஆகியவற்றில் கவனம் செலுத்தியது.
  • சீர்திருத்தப்பட்ட ஐக்கிய நாடுகளின் பாதுகாப்பு சபையில் (UNSC) இந்தியாவின் நிரந்தர உறுப்பினர் உரிமைக்கும், அணுசக்தி விநியோகக் குழுவில் (NSG) இந்தியாவின் உறுப்பினர் உரிமைக்கும் நார்டிக் நாடுகள் ஆதரவு தெரிவித்தன.
  • 4வது இந்தியா-நார்டிக் உச்சிமாநாட்டை பின்லாந்து நடத்தவுள்ளது.

 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்