3வது இந்தியா-நார்டிக் உச்சி மாநாடு நார்வேயின் ஒஸ்லோவில் நடைபெற்றது.
டென்மார்க், பின்லாந்து, ஐஸ்லாந்து, நார்வே மற்றும் ஸ்வீடன் ஆகியன ஐந்து நார்டிக் நாடுகள் ஆகும்.
இந்தியாவும் நார்டிக் நாடுகளும் தங்களது உறவை 'பசுமைத் தொழில்நுட்பம் மற்றும் கண்டுபிடிப்பு உத்திசார் கூட்டாண்மையாக' மேம்படுத்திக் கொண்டன.
இந்த உச்சிமாநாடு பசுமைத் தொழில்நுட்பம், தூய்மையான எரிசக்தி, செயற்கை நுண்ணறிவு (AI), கடல்சார் பாதுகாப்பு, விண்வெளி ஒத்துழைப்பு மற்றும் பருவநிலை நடவடிக்கை ஆகியவற்றில் கவனம் செலுத்தியது.
சீர்திருத்தப்பட்ட ஐக்கிய நாடுகளின் பாதுகாப்பு சபையில் (UNSC) இந்தியாவின் நிரந்தர உறுப்பினர் உரிமைக்கும், அணுசக்தி விநியோகக் குழுவில் (NSG) இந்தியாவின் உறுப்பினர் உரிமைக்கும் நார்டிக் நாடுகள் ஆதரவு தெரிவித்தன.