TNPSC Thervupettagam

இந்தியா-ரஷ்யா எரிபொருள் வர்த்தகம்

September 2 , 2026 14 days 89 0
  • உக்ரைன் ஆளில்லா விமானத் தாக்குதல்கள் ரஷ்ய சுத்திகரிப்பு நிலைய செயல்பாடுகளை சீர்குலைத்ததால், ரஷ்யாவிற்கு பெட்ரோல் வழங்கும் முக்கிய நாடாக இந்தியா உருவெடுத்துள்ளது.
  • 2026 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதத்தில் ரஷ்யாவின் கடல்வழி பெட்ரோல் இறக்குமதி நாளொன்றுக்கு 125,000 பீப்பாய்கள் என்ற சாதனையை எட்டியது.
  • இந்திய சுத்திகரிப்பு நிறுவனங்கள் கடந்த இரண்டு மாதங்களில் சுமார் 1 மில்லியன் பீப்பாய்கள் பெட்ரோலை ரஷ்யாவிற்கு வழங்கியுள்ளன, முக்கியமாக குஜராத்தில் உள்ள வாடினார் சுத்திகரிப்பு நிலையத்திலிருந்து இது வழங்கப்பட்டுள்ளது.
  • 2026 ஆம் ஆண்டு ஜூன் மற்றும் ஜூலை மாதங்களில் இந்தியா நாளொன்றுக்கு 2.6 மில்லியன் பீப்பாய்களுக்கு மேல் ரஷ்ய கச்சா எண்ணெயை இறக்குமதி செய்தது.
  • உள்நாட்டு எரிபொருள் தட்டுப்பாடு காரணமாக ரஷ்யா தனது பெட்ரோல் ஏற்றுமதி தடையை 2027 ஆம் ஆண்டு ஜனவரி வரை நீட்டித்துள்ளது.

 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்