உத்தரகாண்ட் மாநிலத்தின் சமோலி மாவட்டத்திலுள்ள மனா கிராமத்தில் அமைந்த இந்திய-சீன எல்லை அருகே, இந்தியாவின் மிக உயரமான மூலிகைப் பூங்காவானது (11,000 அடி) திறக்கப்பட்டுள்ளது.
இந்தப் பூங்காவானது பல்வேறு வகையான மருத்துவம் மற்றும் கலாச்சாரம் முக்கியத்துவம் வாய்ந்த ஆல்பைன் (alpine) இனங்களைப் பாதுகாக்கும் நோக்கில் தொடங்கப் பட்டுள்ளது.
இந்த இனங்களின் பரவல் மற்றும் வாழ்விட சூழலியல் பற்றிய ஒரு ஆராய்ச்சியை மேற்கொள்வதையும் நோக்கமாகக் கொண்டு இது அமைக்கப்பட்டுள்ளது.