TNPSC Thervupettagam

மலபார் கலகம் – 1921

August 24 , 2021 1460 days 2650 0
  • மாப்பில்லா கலகம் (அ) மலபார் கலகமானது மோப்லா கலகம் (மோப்லா கலவரம்) எனவும் அழைக்கப்படுகிறது.
  • 1921 ஆம் ஆண்டின் மலபார் கலகமானது மலபார் பகுதியில் (வடக்கு கேரளா), பிரித்தானிய மற்றும் இந்து நிலக்கிழார்களை எதிர்த்து மோப்லாக்களால் (மலபார் முஸ்லீம்) 19வது மற்றும் 20 ஆம் நூற்றாண்டுகளில் மேற்கொள்ளப்பட்ட ஒரு தொடர் கலவரத்தின் உச்சநிலையாகும்.
  • கிலாஃபத் இயக்கத்தின் ஓர் அங்கமாகத் தொடங்கப்பட்ட இந்த எழுச்சியானது, கேரளாவின்  மலப்புரம் மாவட்டத்தின் பகுதிகளில் நடைபெற்றது.
  • இது வரியம் குன்னத் குஞ்சஹமது ஹாஜி என்பவர் தலைமையிலான ஓர் ஆயுதமேந்தியக் கிளர்ச்சி ஆகும்.
  • 2021 ஆம் ஆண்டானது இந்த எழுச்சியின் 100வது நிறைவு ஆண்டாகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்