TNPSC Thervupettagam

இந்தியாவின் மிகப்பெரிய பவளப்பாறை தொகுதி

June 6 , 2026 10 days 107 0
  • லட்சத்தீவு தீவுக்கூட்டத்தில் உள்ள கட்மட் தீவு அருகே உள்ள மாபெரும் 'பவோனா கிளாவஸ்' (உருளைக்கிழங்கு திட்டு) பவளப்பாறை தொகுதியை கடல் ஆராய்ச்சியாளர்கள் ஆவணப்படுத்தியுள்ளனர்.
  • 'உருளைக்கிழங்கு திட்டு' என்பது பவோனா கிளாவஸ் (உருளைக்கிழங்கு பவளம்) வகையைச் சேர்ந்த ஒரு கடினமான பவளப்பாறை தொகுதியாகும், மேலும் இது சுமார் 4,250 சதுர மீட்டர் பரப்பளவைக் கொண்டுள்ளது, இதன் மூலம் இது உலகின் அறியப்பட்ட மிகப்பெரிய பவளப்பாறை தொகுதிகளில் ஒன்றாக விளங்குகிறது.
  • கட்மட் தீவின் தென்கிழக்கு கடலோர நீரில் அமைந்துள்ள இந்தக் காலனி 700 முதல் 1,800 ஆண்டுகள் பழமையானது என மதிப்பிடப்பட்டுள்ளது மற்றும் இது பவள பாலிப்களால் தொடர்ச்சியாக கால்சியம் கார்பனேட் படிவு செய்யப்பட்டதன் மூலம் உருவாக்கப்பட்டது.
  • மீண்டும் மீண்டும் ஏற்படும் கடல் வெப்ப அலைகள் மற்றும் பவளப்பாறைகள் வெளுத்தல் நிகழ்வுகள் இருந்தபோதிலும், இதன் திசுக்களில் 58.47% உயிருடனும் ஆரோக்கியத்துடனும் உள்ளது.
  • இந்தக் தொகுதியானது கடல்வாழ் உயிரினங்களுக்கு ஒரு முக்கிய வாழ்விடமாக செயல்படுவதுடன் பருவநிலை மாற்றம், கடந்தகால கடல் நிலைகள் மற்றும் பவளப்பாறைகளின் மீள்திறன் ஆகியவற்றை ஆய்வு செய்வதற்கான மதிப்புமிக்க சான்றுகளை வழங்குகிறது.

 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்