இந்தியாவின் முதல் உள்நாடு சொகுசுக் கப்பல் - அங்க்ரியா
October 24 , 2018 2805 days 1024 0
இந்தியாவின் முதல் ஆடம்பர சொகுசுக் கப்பலான அங்க்ரியாவானது மும்பையில் தொடங்கப்பட்டது.
மும்பையிலிருந்து கோவா வரை செல்லும் இந்த சொகுசுக் கப்பலை மத்திய கப்பல் போக்குவரத்து அமைச்சர் நிதின் கட்காரி மற்றும் மகாராஷ்டிரா முதல்வர் தேவேந்திர பட்நாவிஸ் ஆகியோர் துவங்கி வைத்தனர்.
மராத்தா கடற்படையின் முதல் அட்மிரல் கன்ஹோஜி அங்கிரே மற்றும் விஜய்துர்க் அருகே உள்ள அங்கிரியா பவளப்பாறை ஆகியவற்றின் பெயரே இதற்கு வைக்கப்பட்டுள்ளது.