இந்தியாவின் முதல் செயற்கை நுண்ணறிவிற்குத் தயார் நிலையிலான மேகக் கணினி
August 3 , 2025 19 days 82 0
தகவமைப்பு மிக்க கணினி முறைமைக்காக வடிவமைக்கப்பட்ட இந்தியாவின் முதல் செயற்கை நுண்ணறிவிற்கு தயார் நிலையிலான மேகக் கணினி அடிப்படையிலான JioPC எனப்படும் ஒரு மெய்நிகர் கணினித் தளத்தினை ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் வெளியிட்டது.
இது சந்தா அடிப்படையிலான மாதிரியுடன் தேவைக்கேற்ற மேம்படுத்தல்களை வழங்குகிறது மற்றும் கற்றல் வேலை மற்றும் அன்றாடப் பணிகளுக்கான செயற்கை நுண்ணறிவு கருவிகளை வழங்குகிறது.
JioPC ஆனது மாணவர்கள், தொழில் துறை வல்லுநர்கள் மற்றும் வணிகங்களுக்கு ஏற்ற முக்கிய செயற்கை நுண்ணறிவு கருவிகளுடன் Adobe Express முறைமைக்கான இலவச அணுகலை வழங்க Adobe நிறுவனத்துடன் கூட்டு சேர்ந்துள்ளது.