இந்தியாவின் முதல் மிதக்கும் நிதி கல்வியறிவு முகாம்
November 12 , 2022 979 days 504 0
சமீபத்தில், இந்தியத் தபால் பண வழங்கீட்டு வங்கியானது (IPPB) இந்தியாவின் முதல் மிதக்கும் நிதி கல்வியறிவு முகாமை நடத்தியது.
ஸ்ரீநகரில் பெண்களின் நிதி கல்வியறிவை மேம்படுத்துவதற்காக ‘பெண்களால், பெண்களுக்காகவே’ தொடங்கப்பட்ட ‘நிவேஷக் திதி’ என்று அழைக்கப்படும் இந்த முன்னெடுப்பானது மேற்கொள்ளப்பட்டது.
பெரு நிறுவன விவகார அமைச்சகத்தின் கீழ் முதலீட்டாளர் கல்வி மற்றும் பாதுகாப்பு நிதி ஆணையத்துடன் (IEPFA) இணைந்து இந்திய தபால் பண வழங்கீட்டு வங்கியினால் இந்த முன்னெடுப்பானது தொடங்கப்பட்டது.