ரஷ்யாவிலிருந்து இந்தியாவின் எண்ணெய் இறக்குமதி 2025 ஆம் ஆண்டு நவம்பர் மாதத்தில், கடந்த ஆறு மாதங்களில் இல்லாத அளவுக்கு உயர்ந்தது, அதே நேரத்தில் அமெரிக்காவிலிருந்து மேற்கொள்ளப்படும் இறக்குமதியும் அதிகரித்தது.
இந்தியா ரஷ்யாவிலிருந்து 7.7 மில்லியன் டன் எண்ணெயை இறக்குமதி செய்தது என்ற நிலையில் இது 2025 ஆம் ஆண்டு நவம்பர் மாதத்தில் பதிவான மொத்த எண்ணெய் இறக்குமதியில் 35.1% ஆகும்.
இது 2025 ஆம் ஆண்டு மே மாதத்திற்குப் பிறகு பதிவான மிக உயர்ந்த நிலையாகும், என்பதோடு இது 2024 ஆம் ஆண்டு நவம்பர் மாதத்தில் பதிவான இறக்குமதியை விட அதிகமாகும்.
மதிப்பு அடிப்படையில், இந்தியா 2025 ஆம் ஆண்டு நவம்பர் மாதத்தில் 3.7 பில்லியன் டாலர் மதிப்புள்ள ரஷ்ய எண்ணெயை இறக்குமதி செய்தது.
அமெரிக்காவிலிருந்து மேற்கொள்ளப்படும் எண்ணெய் இறக்குமதி கடந்த ஏழு மாதங்களில் இல்லாத அளவுக்கு உயர்ந்தது என்பதோடு இது இந்தியாவின் எண்ணெய் இறக்குமதியில் சுமார் 12.6% ஆகும்.
ரஷ்யாவும் அமெரிக்காவும் சேர்ந்து, 2025 ஆம் ஆண்டு நவம்பர் மாதத்தில் இந்தியாவின் மொத்த எண்ணெய் இறக்குமதியில் சுமார் பாதி பங்கினைக் கொண்டிருந்தன.