TNPSC Thervupettagam

இந்தியாவிற்கான ஹெக்சாவலண்ட் தடுப்பூசி ஊக்கம்

August 9 , 2026 5 days 58 0
  • இந்தியாவின் உலகளாவிய நோய்த்தடுப்பு திட்டத்தில் (UIP) ஹெக்சாவலண்ட் (ஆறுக்கு ஒன்று) தடுப்பூசியை அறிமுகப்படுத்துவது தடுப்பூசித் திறனை மேம்படுத்தும் என மத்திய சுகாதார அமைச்சகம் மற்றும் உலகளாவிய சுகாதார அமைப்புகளின் ஆய்வு கண்டறிந்துள்ளது.
  • ஹெக்சாவலண்ட் தடுப்பூசியானது தொண்டை அடைப்பான் (Diphtheria), ரணஜன்னி (Tetanus), கக்குவான் இருமல் (Pertussis), ஹெபடைடிஸ் பி (Hepatitis B), ஹீமோபிலஸ் இன்ஃப்ளூயன்ஸா வகை b (Hib) மற்றும் போலியோ ஆகிய ஆறு நோய்களிலிருந்து பாதுகாக்கிறது.
  • இது குழந்தைகளுக்குத் தேவைப்படும் ஊசிகளின் எண்ணிக்கையைக் குறைக்கவும், சுகாதாரப் பணியாளர்களின் பணிச்சுமையைக் குறைக்கவும், மற்றும் குளிர்பதனச் சங்கிலி மேலாண்மைத் தேவைகளைக் குறைக்கவும் முடியும்.
  • இந்தியா ஆண்டுக்கு சுமார் 2.6 கோடி குழந்தைகளுக்குத் தடுப்பூசி செலுத்துகிறது, தற்போதைய அமைப்பில் தடுப்பூசி வருகைகளின் போது பல தடுப்பூசி அளவுகள் தேவைப்படுகின்றன.
  • தடுப்பூசி ஆரம்பத்தில் அதிக செலவுகளைக் கொண்டிருந்தாலும், அதன் விலையைக் குறைப்பது அரசாங்கத்திற்கும் வீடுகளுக்கும் ஒட்டுமொத்த சேமிப்பை ஏற்படுத்தும் என அந்த ஆய்வு கண்டறிந்துள்ளது.
  • எதிர்காலக் கொள்கை முடிவுகளில் தற்போதைய பென்டாவலண்ட் தடுப்பூசி மற்றும் பகுதியளவு செயலிழக்கப்பட்ட போலியோ தடுப்பூசி (IPV) அளவுகளை மாற்றுவதன் மூலம் இந்தத் தடுப்பூசி இந்தியாவின் நோய்த்தடுப்புத் திட்டத்தை எளிதாக்க முடியும்.

 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்