சமீபத்தில் இந்தியாவின் இணையம் மற்றும் கைபேசி மன்றமானது ஒரு அறிக்கையை வெளியிட்டுள்ளது.
இந்த அறிக்கையின்படி, இந்தியாவின் ஊரகப் பகுதிகளில் இணையத்தைப் பயன்படுத்தும் பயனாளிகளின் எண்ணிக்கையானது (227 மில்லியன்) நகர்ப்புறப் பகுதிப் பயனாளிகளுடன் (205 மில்லியன்) ஒப்பிடும் பொழுது 10% அதிகரித்துள்ளது.
இணையச் சேவைப் பயன்பாட்டைப் பொறுத்த வரையில், அமெரிக்கா (88%) மற்றும் சீனாவிற்கு (61%) அடுத்து இந்தியா (40%) உள்ளது.
இணையச் சேவையைப் பயன்படுத்துவதில் ஆண்களை விட பெண்களே அதிகமாக உள்ளனர்.
இணையச் சேவையைப் பயன்படுத்துவதில் மாநிலங்களில் தில்லி முதலிடத்திலும், அதற்கு அடுத்து கேரள மாநிலமும் உள்ளது.