இந்தியாவில் பிறப்பு மற்றும் இறப்புச் சான்றிதழ்கள் பிறப்புகள் மற்றும் இறப்புகளின் பதிவுகள் சட்டம், 1969ன் கீழ் வழங்கப் படுகின்றன.
இச்சட்டத்தின் கீழ், மத்திய அரசானது இந்தியாவின் தலைமைப் பதிவாளரை நியமிக்க முடியும்.
மாநில அரசுகள் இறப்புச் சான்றிதழ்களை வழங்கும் உரிமையைக் கொண்டிருந்தாலும், இது போன்ற சான்றிதழ்கள் வழங்குதல் குறித்த ஆணைகளை மத்திய அரசு மாநிலங்களுக்குப் பிறப்பித்து உள்ளது.
பேரிடர் மேலாண்மைச் சட்டத்தின் படி, மாநில அரசுகள் தனக்குரிய அதிகாரங்களைக் கொண்டிருந்தாலும், மத்திய அரசு பிறப்பிக்கும் ஆணைகளை மாநில அரசுகள் பின்பற்ற வேண்டும்.