TNPSC Thervupettagam

இந்தியாவில் குழந்தை நலன் பற்றிய அறிக்கை

July 15 , 2022 1117 days 581 0
  • இது 2022 ஆம் ஆண்டிற்கான உலக உணவுப் பாதுகாப்பு மற்றும் ஊட்டச்சத்து நிலை பற்றிய அறிக்கையில் வெளியிடப் பட்டது.
  • இந்தியாவில் ஊட்டச்சத்துக் குறைபாடு உள்ளவர்களின் எண்ணிக்கையானது 2019/ 2021 ஆம் ஆண்டில் கடந்த 15 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு 224.3 மில்லியனாக குறைந்துள்ளது.
  • 2012 ஆம் ஆண்டில் 52.3 மில்லியனில் இருந்த 5 வயதுக்குட்பட்ட வளர்ச்சி குன்றிய குழந்தைகளின் எண்ணிக்கையானது 2020 ஆம் ஆண்டில் 36.1 மில்லியனாக குறைந்து உள்ளது.
  • 2012 ஆம் ஆண்டில் மூன்று மில்லியனாக இருந்த ஐந்து வயதுக்குட்பட்ட அதிக எடை கொண்ட குழந்தைகளின் எண்ணிக்கையானது 2012 ஆம் ஆண்டில் 2.2 மில்லியனாகக் குறைந்துள்ளது.
  • 2012 ஆம் ஆண்டில் 11.2 மில்லியனாக இருந்த 5 மாதங்கள் வரையிலான தாய்ப்பால் வழங்கப்பட்ட குழந்தைகளின் எண்ணிக்கையானது 2020 ஆம் ஆண்டில் 14 மில்லியன் என்ற அளவினைத் தொட்டது.
  • 2012 ஆம் ஆண்டில் 25.2 மில்லியனாக இருந்த 1.38 பில்லியனுக்கும் அதிகமான மக்கள் தொகை கொண்ட இந்தியாவில் உள்ள பருமனான வயது வந்தோரின் எண்ணிக்கை என்பது 2016 ஆம் ஆண்டில் 34.3 மில்லியனாக அதிகரித்துள்ளது.
  • 2012 ஆம் ஆண்டில்  171.5 மில்லியனாக  இருந்த இரத்த சோகையால் பாதிக்கப்பட்ட 15 முதல் 49 வயதுடைய பெண்களின் எண்ணிக்கையானது 2019 ஆம் ஆண்டில் 187.3 மில்லியனாக அதிகரித்துள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்