COVID-19 வைரஸின் மரபுகூறைப் பிரித்தெடுத்த உலகின் ஐந்தாவது நாடாக இந்தியா உருவெடுத்துள்ளது.
இதற்கு முன்பு ஜப்பான், தாய்லாந்து, அமெரிக்கா மற்றும் சீனா ஆகிய நாடுகள் கொரோனா வைரஸின் மரபுகூறை வெற்றிகரமாகப் பிரித்தெடுத்துள்ளன.
இது நாட்டில் மருந்துகள், தடுப்பூசிகள் மற்றும் விரைவாக நோய் கண்டறிதல் கருவிகள் ஆகியவற்றின் மேம்பாட்டிற்கு உதவுகின்றது.
இந்தியாவில் பிரித்தெடுக்கப்பட்ட கொரோனா வைரஸின் மரபுகூறானது வுஹான் நகரில் இருந்த கொரோனா வைரஸின் மரபுகூறுடன் ஒப்பிடும் பொழுது 99.99% ஒத்தவையாக உள்ளது என்று இந்திய மருத்துவ ஆராய்ச்சி மன்றத்தின் (Indian Council of Medical Research - ICMR) பொது இயக்குநரான பல்ராம் பார்கவா கூறியுள்ளார்.