- இந்தியாவில் ஸ்புட்நிக் V தடுப்பு மருந்தினை அறிமுகப்படுத்துவதாக Dr. ரெட்டிஸ் ஆய்வகமானது அறிவித்துள்ளது.
- இந்தத் தடுப்பு மருந்தானது ரஷ்யாவிலிருந்து இறக்குமதி செய்யப்பட்டு Dr. ரெட்டிஸ் ஆய்வகத்தினால் விநியோகிக்கப்படுகிறது.
- தற்போது, ஸ்புட்நிக் V தடுப்பு மருந்தானது நாட்டின் இரண்டாவது விலையுயர்ந்த கோவிட்-19 தடுப்பு மருந்தாகும்.
- ஸ்புட்நிக் V தடுப்பு மருந்தின் ஒரு தவணை மருந்தளவின் (Dosage) விலை ரூ.995 ஆகும்.
- கோவிசீல்டினுடைய ஒரு தவணை மருந்தளவின் விலையானது ரூ.400 ஆகும்.
- சமீபத்தில் இதன் விலையானது ஒரு தவணைக்கு ரூ.300 ஆக குறைக்கப்பட்டது.
- இந்த மருந்தினை சீரம் இன்ஸ்டிடியூட் ஆஃப் இந்தியா எனும் நிறுவனமானது உள்நாட்டிலேயே தயாரிக்கிறது.
- கோவாக்சின் தடுப்பு மருந்தானது மாநில அரசுகளிடம் ஒரு தவணைக்கு ரூ.600 என்ற விலையிலும் தனியார் மருத்துவமனைகளிடம் ஒரு தவணைக்கு ரூ.1200 என்ற விலையிலும் வழங்கப் படுகிறது.
ஸ்புட்நிக் V பற்றிய தகவல்கள்
- ஸ்புட்நிக் V தடுப்பு மருந்தானது மாஸ்கோவிலுள்ள காம்லியா தொற்று நோயியல் மற்றும் நுண்ணுயிரியல் ஆராய்ச்சி நிறுவனத்தினால் உருவாக்கப்பட்டதாகும்.
- இது இரண்டு தவணை (Dose) தடுப்பூசியாகும்.
- இருப்பினும் ரஷ்யாவில் ஒற்றைத் தவணை ஸ்புட்நிக் V தடுப்பு மருந்து சமீபத்தில் தயாரிக்கப் பட்டுள்ளது.
- இது ஸ்புட்நிக் லைட் ஒற்றைத் தவணை தடுப்பு மருந்து என அழைக்கப்படுகிறது.
- இந்திய நாடானது ஸ்புட்நிக் V இரட்டைத் தவணை தடுப்பு மருந்தினையே தற்போது வழங்குகிறது.
- ஸ்புட்நிக் V தடுப்பு மருந்தானது வெவ்வேறு மனித அடினோ வைரஸ்களை (Human Adenoviruses) பயன்படுத்தி உருவாக்கப் பட்டுள்ளது.
- இந்த தடுப்பு மருந்தின் செயல்திறன் 91% ஆகும்.
- ஸ்புட்நிக் V தடுப்பு மருந்தின் முதல் தவணையானது ஹைதராபாத்தில் வழங்கப் பட்டது.
