TNPSC Thervupettagam

இராஜஸ்தான் ஆளுநர் குறித்த பிரச்சினை

July 29 , 2020 1846 days 594 0
  • மாநில சட்டமன்றத்தைக் கூட்டுதல், ஒத்தி வைத்தல் மற்றும் கலைத்தல் குறித்த ஆளுநரின் அதிகாரமானது அமைச்சரவையின் அறிவுரைப்படி மட்டுமே செயல்பட வேண்டும் என்றும், அவரது சொந்த முடிவில் செயல்படக் கூடாது என்றும் தீர்ப்பு வழங்கப் பட்டிருந்தது.
  • இது 2016 ஆம் ஆண்டில் நபம் ரெபியா எதிர் துணை சபாநாயகர் என்ற ஒரு வழக்கில் இந்திய உச்சநீதிமன்றத்தால் வழங்கப்பட்ட ஒரு தீர்ப்பாகும்.
  • எனினும் அமைச்சரவையானது சட்டமன்றத்தில் நம்பிக்கையை இழந்து விட்டது என்று ஆளுநர் கருதினால், அவர் முதலமைச்சரைச் சட்டமன்றத்தில் பெரும்பான்மையை நிரூபிக்க கோரலாம் என்றும் இந்தத் தீர்ப்பில் கூறப்பட்டு உள்ளது.
  • அரசியலமைப்பின் சரத்து 163 மற்றும் சரத்து 174 ஆகியவை மாநில சட்டமன்றத்தைக் கூட்டுவதற்கான ஆளுநரின் அதிகாரத்துடன் தொடர்புடையவை ஆகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்