உச்ச நீதிமன்ற (நீதிபதிகள் எண்ணிக்கை) திருத்த மசோதா, 2026
August 5 , 2026 3 days 40 0
உச்ச நீதிமன்ற நீதிபதிகளின் அனுமதிக்கப்பட்ட எண்ணிக்கையை 34 லிருந்து 38 ஆக உயர்த்துவதற்கான உச்ச நீதிமன்ற (நீதிபதிகள் எண்ணிக்கை) திருத்த மசோதா, 2026-ஐ மக்களவை நிறைவேற்றியது.
இந்த மசோதா, இந்திய தலைமை நீதிபதியை (CJI) தவிர்த்து நீதிபதிகளின் எண்ணிக்கையை 37 ஆக உயர்த்துகிறது.
இது உச்ச நீதிமன்ற (நீதிபதிகள் எண்ணிக்கை) திருத்த அவசரச் சட்டம், 2026-க்கு மாற்றாக 2026 ஆம் ஆண்டு ஜூலை 20 அன்று மத்திய சட்டத் துறை அமைச்சர் அர்ஜுன் ராம் மேக்வால் அவர்களால் இம்மசோதா அறிமுகப்படுத்தப்பட்டது.
நீதித்துறை திறனை மேம்படுத்துவதையும் உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள வழக்குகளின் எண்ணிக்கையை குறைப்பதையும் இந்த அதிகரிப்பு நோக்கமாகக் கொண்டுள்ளது.
சட்டமியற்றுவதன் மூலம் உச்ச நீதிமன்ற நீதிபதிகளின் எண்ணிக்கையை மாற்றுவதற்கு நாடாளுமன்றத்திற்கு அதிகாரம் உள்ளது.