TNPSC Thervupettagam

உட்கோட்டு நுழைவு அனுமதி முறை – நாகாலாந்தின் திமாபூர் மாவட்டம் மற்றும் மணிப்பூருக்கு நீட்டிப்பு

December 15 , 2019 1985 days 560 0
  • நாகாலாந்து அரசானது திமாபூர் மாவட்டத்திற்கு உட்கோட்டு நுழைவு அனுமதி (Inner Line Permit - ILP) முறையை நீட்டித்துள்ளது.
  • குடியுரிமைத் திருத்த மசோதாவின் (Citizenship Amendment Bill - CAB) வரம்பிலிருந்து இந்த முழு மாவட்டத்திற்கும் விலக்கு அளிக்கும் வகையில் இந்த நடவடிக்கையானது மேற்கொள்ளப் பட்டுள்ளது.
  • இதுவரை, நாகாலாந்தில் ILP முறையின் கீழ் இல்லாத ஒரே மாவட்டம் திமாபூர் ஆகும்.
  • ஏனெனில் இந்த மாவட்டமானது வணிக மையமாகவும் பரந்து பட்ட  மக்கள் தொகையைக் கொண்டதாகவும் உள்ளது (பெரும்பாலும் ‘சிறிய இந்தியா’ என்று குறிப்பிடப் படுகின்றது).
  • இந்த உட்கோட்டு நுழைவு அனுமதி முறையில் மணிப்பூரின் சேர்க்கையும் 2019 ஆம் ஆண்டு டிசம்பர் 10ம் தேதியன்று அறிவிக்கப் பட்டது.
  • தற்சமயம் உட்கோட்டு நுழைவு அனுமதி முறை அருணாச்சலப் பிரதேசம், மிசோரம், நாகாலாந்து மற்றும் மணிப்பூர் ஆகிய மாநிலங்களை உள்ளடக்கி இருக்கின்றது.
  • மேலும், அசாம் மற்றும் திரிபுராவில் உள்ள பழங்குடியினர் அல்லாத பகுதிகள் மற்றும் சிக்கிம் ஆகியவற்றைத் தவிர இந்தியாவில் வடகிழக்கில் உள்ள அனைத்து மாநிலங்களுக்கும் CABயிலிருந்து விலக்கு அளிக்கப் பட்டுள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்