தேசிய இயற்கை வேளாண்மைத் திட்டத்தின் (NMNF) கீழ் உயிரி உள்ளீட்டு வள மையங்களை (BRC) அமைப்பதற்கான வழிகாட்டுதல்களை மத்திய அரசு வெளியிட்டு உள்ளது.
ஒவ்வொரு மையத்தையும் அமைப்பதற்கான நிதி ஆதரவாக இதில் 1 லட்சம் ரூபாய் நிதி உதவி வழங்கப்படும்.
எந்தவொரு BRC தொழில்முனைவோர் குழு/நிறுவனமும் இயற்கை வேளாண்மை முறையினைக் கடைப்பிடிக்க வேண்டும் அல்லது இயற்கை வேளாண்மையில் முன் அனுபவம் உள்ள உறுப்பினர்களைக் கொண்டிருக்க வேண்டும்.
உள்ளூர் விவசாயிகளின் தேவைகள், உள்ளூர் நிலப் பயன்பாட்டு முறைகள், மண் வகைகள் மற்றும் உள்ளூரில் பயிரிடப்படும் பயிர் முறைகள் ஆகியவற்றின் ஒரு அடிப்படையில் உயிரி உள்ளீடுகள் தயாரிக்கப்பட வேண்டும்.