சர்வதேச எரிவாயு ஒன்றியம் (IGU) சமீபத்தில் 2026-ஆம் ஆண்டிற்கான உலகளாவிய LNG (திரவமாக்கப்பட்ட இயற்கை எரிவாயு) அறிக்கையை வெளியிட்டது.
உலகளாவிய LNG தொழில் மற்றும் சந்தைகள் குறித்த விரிவான மற்றும் நம்பகமான கண்ணோட்டத்தை வழங்குவதை இந்த அறிக்கை நோக்கமாகக் கொண்டுள்ளது.
சீனா மற்றும் இந்தியாவின் புதிய கட்டமைப்புகளால், 2025-ஆம் ஆண்டில் உலகளாவிய LNG 'மீண்டும் வாயுவாக்கும்' (regasification) திறன் அதிகரிப்பில் ஆசியா முன்னிலை வகித்தது என்பதுடன் இவை உலகளாவிய கூடுதல் திறனில் முறையே 24% மற்றும் 11.3% பங்களிப்பை அளித்தன.
உக்ரைன் வழியாகச் சென்ற ரஷ்ய எரிவாயு குழாய் வழித்தட சேவை (2025-இன் தொடக்கத்தில் காலாவதியானது) நிறுத்தப்பட்டதால், ஐரோப்பாவின் இறக்குமதி அளவு கணிசமாக அதிகரித்தது.
2025-ஆம் ஆண்டில் உலகளாவிய LNG வர்த்தகம் 437 மில்லியன் டன்கள் என்ற சாதனை அளவை எட்டியது.
அமெரிக்கா, கத்தார், ஆஸ்திரேலியா, ரஷ்யா மற்றும் பிற உற்பத்தியாளர்களிடமிருந்து விநியோகம் அதிகரித்ததே இந்த வர்த்தக வளர்ச்சிக்குக் காரணமாக அமைந்தது.
2022-ஆம் ஆண்டுக்குப் பிறகு கனடா மற்றும் மௌரிடானியா/செனகல் ஆகிய நாடுகள் புதிய LNG ஏற்றுமதி சந்தைகளாக இணைந்துள்ளன.
இந்தியா தனது எட்டு முனையங்கள் (terminals) வாயிலாக ஆண்டுக்கு 52.5 மில்லியன் டன்கள் (mtpa) அளவிலான 'மீண்டும் வாயுவாக்கும்' திறனைச் சேர்த்துள்ளது.
இந்த விரிவாக்கத்தின் மூலம், 2025-ஆம் ஆண்டில் 'மீண்டும் வாயுவாக்கும்' திறனில் ஸ்பெயினை முந்தி இந்தியா உலகின் நான்காவது பெரிய சந்தையாக உருவெடுத்துள்ளது.
குஜராத்தில் உள்ள தஹேஜ் LNG முனையம், உலகளவில் ஆறாவது பெரிய 'மீண்டும் வாயுவாக்கும்' வசதியாகத் திகழ்வதுடன், இந்தியாவின் முதன்மையான மற்றும் மிகப்பெரிய எரிசக்தி மையமாகவும் விளங்குகிறது.
இந்தியாவில் உரம், நகர எரிவாயு மற்றும் பொதுப் பயன்பாட்டுச் சேவைகளுக்கான தேவை அதிகரித்து வருகிறது.
எரிசக்தி கலவையில் திரவமாக்கப்பட்ட இயற்கை எரிவாயுவின் (LNG) பங்கை அதிகரிக்க அரசு முன்னெடுப்புகளை மேற்கொண்டு வருகிறது.