உள்நாட்டு இடப்பெயர்வு குறித்த உலகளாவிய அறிக்கை 2026
May 20 , 2026 33 days 116 0
உள்நாட்டு இடப்பெயர்வு குறித்த உலகளாவிய அறிக்கை (GRID) 2026 இன் படி, 2025 ஆம் ஆண்டின் இறுதிக்குள் 104 நாடுகளில் 82.2 மில்லியன் மக்கள் உள்நாட்டிற்குள்ளேயே இடம் பெயர்ந்துள்ளனர்.
இந்த அறிக்கை உள்நாட்டு இடப்பெயர்வு கண்காணிப்பு மையத்தால், நார்வே அகதிகள் சபையுடன் இணைந்து வெளியிடப்பட்டது.
உள்நாட்டிலேயே இடம்பெயர்ந்த நபர்கள் (IDPs) என்பது தங்கள் வீடுகளை விட்டு வெளியேற வேண்டிய கட்டாயத்திற்குள்ளான ஆனால் தங்கள் சொந்த நாட்டின் எல்லைகளுக்குள்ளேயே தங்கியிருக்கும் மக்கள் ஆவர்.
முதன்முறையாக, மோதல்கள் மற்றும் வன்முறைகள் காரணமாக 68.6 மில்லியன் மக்கள் இடம் பெயர்ந்துள்ளனர் என்ற நிலையில் இதுவே இடப்பெயர்விற்கான மிகப் பெரிய காரணமாக உருவெடுத்துள்ளது.
சூடான் நாடு 9.1 மில்லியனுக்கும் அதிகமான இடம்பெயர்ந்த மக்களுடன், உலகின் மிகப்பெரிய உள்நாட்டு இடப்பெயர்வு நெருக்கடியைப் பதிவு செய்துள்ளது.
மணிப்பூரில் ஏற்பட்ட மேதேயி-குகி வன்முறை காரணமாக 78,000 மக்கள் இன்னும் இடம் பெயர்ந்த நிலையிலேயே உள்ளனர் என்று இந்த அறிக்கை குறிப்பிட்டுள்ளது.