ஏழை கைதிகளுக்கு மத்திய அரசு நிதியிலிருந்து நிதி உதவி வழங்குமாறு அனைத்து மாநிலங்கள் மற்றும் ஒன்றியப் பிரதேசங்களை மத்திய அரசு கோரியுள்ளது.
தங்களது நிதி நிலைமையின் காரணமாக தங்களுக்கு வழங்கப்பட்ட அபராதத்தைச் செலுத்த முடியாததால் சிறைகளில் இருந்து ஜாமீன் அல்லது விடுதலை பெற முடியாத நபர்களுக்கு உதவ இந்த நிதியைப் பயன்படுத்தலாம்.
மத்திய தலைமை முகமை (CNA) மூலம் மாநிலங்கள் மற்றும் ஒன்றியப் பிரதேசங்களுக்கு மத்திய உள்துறை அமைச்சகம் நிதி வழங்குகிறது.
இது தேசியக் குற்றப் பதிவு வாரியத்தினால் (NCRB) நிர்வகிக்கப் படுகிறது.
உள்துறை அமைச்சகம் ஆனது, 2023 ஆம் ஆண்டு மே மாதத்தில் 'ஏழை கைதிகளுக்கு ஆதரவு வழங்கும் திட்டத்தினை' அறிமுகப்படுத்தியது.
2025 ஆம் ஆண்டு இந்திய நீதி அறிக்கையின் படி, சிறைகளில் உள்ள தேசிய சராசரி கைதிகள் இருப்பு விகிதம் 131 சதவீதத்திற்கும் அதிகமாக உள்ளது.
விசாரணைக் கைதிகளின் எண்ணிக்கை சிறைகளில் உள்ள மொத்த கைதிகளில் 76 சதவீதமாக இருக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளது.