2018 ஆம் ஆண்டிற்கான ஐக்கிய நாடுகளின் ‘சாம்பியன்ஸ் ஆப் தி எர்த்’ விருதானது பிரதமர் நரேந்திர மோடிக்கு வழங்கப்பட்டுள்ளது.
2022 ஆம் ஆண்டிற்குள்ளாக இந்தியாவில் ஒற்றைப் பயன்பாட்டு பிளாஸ்டிக்கை ஒழிப்பதற்கான முயற்சிகளுக்காக கொள்கைகளுக்கான தலைமைப் பிரிவில் மிக உயர்ந்த சுற்றுச்சூழல் கௌரவத்துடன் ஐநா சபையானது மோடியை அங்கீகரித்துள்ளது.
சுற்றுச்சூழல்களில் மிகச்சிறந்த மாற்றங்களை கொண்டு வந்த உலகின் ஆறு பேருக்கு சாம்பியன்ஸ் ஆப் தி எர்த் விருது வழங்கப்படுகிறது.
பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மேக்ரான் மற்றும் மோடி ஆகிய இருவரும் கொள்கை தலைமைத்துவ பிரிவில் கூட்டாக அங்கீகரிக்கப்பட்டுள்ளனர்.
நீடித்த மற்றும் நிலையான ஆற்றல் பயன்பாட்டில் தலைமை வகித்ததற்காக ‘’தொழில் முயற்சி தொலைநோக்கு பார்வைக்கான விருது’’ கொச்சியின் சர்வதேச விமான நிலையத்திற்கு அளிக்கப்பட்டுள்ளது.
இந்த விமான நிலையமானது உலகின் முதலாவது முழுவதும் சூரிய ஆற்றலால் இயங்குவதாகும்.
மற்ற வெற்றியாளர்கள்
சுற்றுச்சூழல் மற்றும் பூர்வகுடிகளின் உரிமைகள் பாதுகாவலரான ஜோன் கார்லிங்
20 வருடங்களுக்கு மேலாக பூர்வ குடிமக்களின் சுற்றுச்சூழல் உரிமைகளை மற்றும் நிலங்களை பாதுகாத்ததற்காக
சீனாவின் ஜீஜியாங்-இன் கிராமப்புற பசுமை மறுமலர்ச்சி திட்டம்.
கிழக்கு சீனாவின் ஜீஜியாங் மாகாணத்தில் ஆறுகள் மற்றும் நீரோடைகளின் மாசுபட்ட பெரும் பகுதியை மாற்றியமைத்ததற்காக
பியான்ட் மீட் மற்றும் இம்பாசிபுல் ஃபுட் நிறுவனங்கள்