ஐக்கிய நாடுகள் பொதுச் சபையில் அதிகப் பெரும்பான்மையுடன் 2022-24 ஆகிய காலகட்டத்திற்கு ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் சபைக்கு இந்தியா மீண்டும் தேர்வாகியுள்ளது.
இந்த முடிவானது ஐக்கிய நாடுகள் பொதுச் சபையின் 76வது கூட்டத்தில் மேற் கொள்ளப் பட்டது.
193 உறுப்பினர்களைக் கொண்ட சபையில் 184 வாக்குகளைப் பெற்று இந்தியா இந்தப் பதவிக்குத் தேர்வாகியுள்ளது.